சிறுநீரக கற்களைக் கரைக்க ...
சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் சில உணவு முறைகளை பின்பற்றினால், கற்கள் கரைய உதவும்.
பார்லித் தண்ணீர், இது சிறுநீரக நச்சுகளை நீக்கி, கற்களின் அடர்த்தியைக் குறைத்து அவை சிறுநீர் மூலம் வெளியேற உதவுகிறது.
எலுமிச்சை சாறுஇதில் உள்ள சிட்ரேட்டுகள் கற்கள் உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே உள்ள கற்களை உடைக்கும் திறனையும் கொண்டுள்ளது.
இளநீர் உடலை நீரேற்றத்துடன் வைத்து, சிறுநீரகப் பாதையில் தேவையற்ற தாதுக்கள் படிவதைக் குறைத்து, கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது.
மாதுளையில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்டுகள் மற்றும் இயற்கை அமிலங்கள், கற்கள் உருவாகக் காரணமான தாதுக்கள் படிவதைத் தடுக்கின்றன.
கொத்தமல்லி இயற்கையாகவே சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது. மேலும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை நீக்கவும் செயல்படுகின்றன.சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் கொத்தமல்லி சாறு தினமும் குடித்து வந்தால் சிறுநீரக கற்களை விரைவில் அகற்றலாம்.
தக்காளியில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் பிரச்சனையை போக்க உதவும்.சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், தக்காளி சாற்றில் உப்பு மற்றும் மிளகு தூள் கலந்து குடிக்கலாம்.
தினமும் அதிக தண்ணீர் குடிப்பதும், உணவில் உப்பின் அளவை குறைப்பதும் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்க அத்தியாவசியமாகும். இந்த உணவு முறைகளை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
0
Leave a Reply