25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிட்டால்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிட்டால்...

வாழைப்பழம்நன்குபழுத்துதோலில்கருப்புஅல்லதுபழுப்புநிறமாற்றம்அடைந்தபழங்களில்தான்சத்துக்கள்கொட்டிகிடைக்கின்றன.வாழைப்பழத்தில் ரிப்டோபின் அதிகளவில் இருக்கிறது. இது நாள்பட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களால் இயற்கையான முறையில் தேவையான அளவு செரடோனினை சுரக்க வைக்க முடியாது. கருப்பு புள்ளியுள்ள வாழைப்பழம் உண்பதன் மூலம் ரிப்டோபின், செரடோனினாக மாற்றப்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.

வாழைப்பழத்தில் பிராக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் என மூன்றின் கலவை அதிகமாக இருக்கின்றது. இது உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக அளிக்கின்றது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றம் சீராக்கவும் உதவுகிறது.தினமும் 2 புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிட்டால் மூளையின் நலன் காக்கப்படுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் செல்லுலார் செயல்பாட்டை சீராக்குகிறது.

ரொம்ப பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு இதயத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டால், பழுத்த வாழைப்பழங்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். இவை கொலஸ்ட்ராலைக் கூட கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் இருதய நோய்களின் அபாயம் குறையும்.  தசைவலி பிரச்சனை இருந்தால், நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.

பழுத்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் வலியிலிருந்து நிவாரணம் பெற அவற்றைப் பயன்படுத்தலாம். பழுத்த மஞ்சள் வாழைப்பழத்தில் உள்ள கரும்புள்ளிகள், புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் ஒரு பொருளான ட்யூமர் நெக்ரோசிஸ் ஃபேக்டர்(TNF) அதிக அளவில் இருப்பதை குறிக்கிறது. 

பழுத்த வாழைப்பழங்கள் மலமிளக்கியாகவும் செயல்படும். மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் உண்ணலாம். ஆனால் வாழைப்பழமும் பாலும் எடையை கூட்டி விடும் என்பதால் எடை குறைப்பு செய்பவர்கள் கவனமாக எடுத்து கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் உண்ணலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News