25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 நிகழ்ச்சிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மூன்றாவது புத்தகத் திருவிழா- 2024 நிகழ்ச்சிகள்

விருதுநகரில் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்  இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் 27.09.2024 முதல் 07.10.2024 வரை நடைபெறும் மூன்றாவது விருதுநகர் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
, மூன்றாம் நாளான 29.09.2024 அன்று துணை இயக்குநர் (திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம்) திரு.ப.தேவராஜ்.,இ.வ.ப. அவர்கள் தலைமையில், வத்திராயிருப்பு திரு.தெ.சு.கவுதமன்  அவர்கள் எழுதிய  “அப்பாவின் வாசம்“ என்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியும்,  பேச்சாளர் திரு.சி.அன்னக்கொடி அவர்கள் “கி.ராவும் நானும்” என்ற தலைப்பிலும், திரைப்படக் கலைஞர் மற்றும் இயக்குநர்  திரு.தம்பி ராமையா அவர்கள் “உறவுகள்”; என்ற தலைப்பிலும், சிறப்புரை ஆற்றினார்கள்.

பின்னர், நடைபெற்ற சுழலரங்கம் நிகழ்ச்சியில், இலக்கியத்தில் மரபு குழுவில், திரு.கா.காளியப்பன் அவர்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் மரபு என்ற தலைப்பிலும், இலக்கிய விமர்சகர் திரு.ம.மணிமாறன் அவர்கள் கரிசல் இலக்கியத்தில் மரபு என்ற தலைப்பிலும், கவிஞர் திரு.அ.இலட்சுமி காந்தன்  அவர்கள் நவீன இலக்கியத்தில் மரபு என்ற தலைப்பிலும்,இலக்கியத்தில் இயற்கை குழுவில், கவிஞர் திரு.எல்.கே.சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பிலும், திரு.முத்து பாரதி அவர்கள் கரிசல் இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பிலும், இயற்கை ஆர்வலர் ஆர்.ஆனந்தி அவர்கள் நவீன இலக்கியத்தில் இயற்கை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தீயணைப்பு அலுவலர் திரு.க.ஜே.விவேகானந்தன் அவர்கள் வரவேற்புரையும், கோட்ட வன அலுவலர் திரு.நவநீதகிருஷ்ணன் அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News