25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


4 மாத பெண் குழந்தை இஷான்வி.  உலக சாதனை புத்தகத்தில் .....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

4 மாத பெண் குழந்தை இஷான்வி.  உலக சாதனை புத்தகத்தில் .....

பெங்களூரைச் சேர்ந்தவர்கள் பிரஜ்வல்- சினேகா. இவர்களின் நான்கு மாத பெண் குழந்தை இஷான்வி. மகள் பிறந்து இரண்டு மாதங்களிலேயே, தன் மகளிடம் சினேகா, சில பொருட்களை காட்டி, அறிமுகப்படுத்தி வந்தார்.ஒருநாள் ஒருபொருளை சுட்டிக் காட்டி, கேட்டபோது, சரியான பொருளை இஷான்வி அடையாளம் காட்டியது. இதனால் ஆச்சர்யமடைந்த சினேகா, மேலும் தான் சொல்லிக் கொடுத்த பொருட்களை அடையாளம் காட்ட ஊக்கப்படுத்தினார். இப்படியாக இஷான்வியும் பொருட்களை சரியாக அடையாளம் காணத் துவங்கியது. இதையறிந்த உறவினர்கள், நண்பர்கள், இதை வீடியோவாக பதிவு செய்து,நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' தேர்வு குழுவுக்கு அனுப்பும்படி கூறினர்.அதன்படி பெற்றோரும், குழந்தையிடம் 10 பறவைகள், 10 வீட்டு விலங்குகள், 10 வெவ்வேறு பறவைகள், 10 பூக்கள், 10 வாகனங்கள், 10 விலங்குகள், 11 வண்ணங்கள், 15 காய்கறிகள், 14 பழங்கள், 13 பொது உருவங்கள், 12 வடிவங்கள் என, 125 பொருட்களை இஷான்வி அடையாளம் காட்ட பழக்கியிருந்தனர்.
இதை வீடியோவாக எடுத்து'நோபல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' தேர்வு குழுவுக்கு பிரஜ்வல்- சினேகா தம்பதி அனுப்பி வைத்தனர். இதை ஆய்வு செய்த அமைப்பினர், நான்கு மாத பெண் குழந்தை இஷான்வி, புதிய உலக சாதனை படைத்து உள்ளதாக அறிவித்துள்ளனர்.இதனால் பெற்றோர், குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.இதற்கு முன்பு, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நான்கு மாத குழந்தை, 120 பொருட்களை அடையாளம் காண்பித்ததே உலக சாதனையாக கருதப்பட்டது. தற்போது அந்த சாதனையை இஷான்வி முறியடித்துவிட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News