25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஜேர்மனியில் வசிக்கும் கோடீஸ்வரருக்கு குப்பை அள்ளும் வேலை   
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜேர்மனியில் வசிக்கும் கோடீஸ்வரருக்கு குப்பை அள்ளும் வேலை   

பெரிய கோடீஸ்வரர்கள் என்றாலே தங்களிடம் இருக்கும் பணத்தை எதாவது முதலீடு செய்வார்கள், ஆடம்பரமான வீட்டை வாங்குவார்கள். இன்னும் சிலர் எதாவது பயணம் செய்ய வேண்டும் என்று செலவு செய்வார்கள். அப்படி தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், நாம் இங்கு பார்க்க போகிறவர் சற்று வித்தியாசமானவர்.ஜேர்மனியில் வசிக்கும் கோடீஸ்வரர் ஹெயின்ஸ் பி(HeinzB). இவரை பார்த்தால் நாம் அவ்வளவு பணம் இவரிடம் உள்ளதா என்று நினைக்க முடியாது. ஆனால், இவர் வாழும் வாழ்க்கையானது வீடில்லாமல் ஒரு மனிதன் வாழ்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி உள்ளது.

இவருக்கு சொந்தமாக பத்து வீடுகள் இருந்தாலும் குப்பைகளை சேகரித்து தனக்கு தேவையான உணவை பெற்றுக் கொள்கிறார். இவர் மாதத்திற்கு உணவுக்கு மட்டுமே ரூ.450 தான் செலவு செய்கிறார். சில நேரங்களில் தான் சேகரிக்கும் குப்பைகளில் இருந்து தனக்கான உணவை ஏற்பாடு செய்து கொள்கிறார்.இவர் கூறுவது என்னவென்றால், மக்கள் ஒரு குடும்பத்திற்கே தேவையான அளவு உணவை தினமும் வீணடிக்கிறார்கள் என்பது தான்.

இந்த கோடீஸ்வரரின் சொத்து மதிப்பை பொருத்தவரை,2021ம் ஆண்டில்,7 வீடுகள் மற்றும்2 அடுக்குமாடி குடியிருப்புகளை வைத்திருந்தார். மேலும், வங்கியில் இருந்த ரூ.4 கோடியை பயன்படுத்தி வீடு வாங்கி, தற்போது10 வீடுகளுக்கு சொந்தக்காரராக உள்ளார்.இதை தவிரFixedDepositல் ரூ.90 லட்சம் வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மாதத்திற்கு ரூ.3 லட்சத்து23 ஆயிரம் ஓய்வூதியம் பெறுகிறார். அதோடு, மற்றொரு ஓய்வூதியத்தில் ரூ.14 ஆயிரம் பெறுகிறார். இவை எல்லாம் இருந்தும் ஹெயின்ஸ் பி ஒரு யாசகரை போல சைக்கிளில் பயணிக்கிறார் 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News