25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


34-வது விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்புமனு பரிசீலனையின் முடிவில் மொத்தம் 27 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

34-வது விருதுநகர் மக்களவைத் தொகுதி வேட்புமனு பரிசீலனையின் முடிவில் மொத்தம் 27 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாட்டிற்குட்பட்ட மக்களவைத் தொகுதியின் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19.04.2024- அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, விருதுநகர் மக்களவை தொகுதியில் கடந்த மார்ச் 20 முதல் மார்ச் 27-ம் தேதி வரையிலும், மொத்தம் 41 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில், மேற்படி அனைத்து வேட்பு மனுக்களும் 34-வது விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரால் 28.03.2024-ம் தேதி காலை 11.00 மணி முதல் தொடர்புடைய வேட்பாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் மேற்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா,I A S., அவர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டது.
மேற்படி பரிசீலனையின் முடிவில் மொத்தம் 27 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என 34-வது விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News