25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஏசி கரண்ட் பில் கம்மியா வர.... TIPS
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஏசி கரண்ட் பில் கம்மியா வர.... TIPS

வெயில் காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் மக்கள் அதிக சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். வெயிலில் இளைப்பாற ஃபேன், ஏசி, பிரிட்ஜ் போன்ற அதிகம் பயன்படுத்துவதால் மின்கட்டணம் உயரும். குறிப்பாக ஏசிபயன்பாடு மின் கட்டண உயர்வு முக்கியக் காரணமாக இருக்கும். : கோடைக்காலத்தில் எவ்வளவு நேரம் ஏசி ஓடினாலும் குறைவான ஈ.பி. பில்வருவதற்கு சில வழிகள் உள்ளன..

தேவையற்ற நேரங்களில் கண்டிப்பாக ஏசியை ஆஃப் செய்ய வேண்டும். மெயின் சுவிட்சை அணைக்காமல், ரிமோட் மூலம் மட்டும் ஆஃப் செய்யக்கூடாது. பயன்படுத்தாத நேரத்தில் ஏசியின் மெயின் சுவிட்சை அணைத்து வைக்க வேண்டும்.ஏசியை சரியான வெப்பநிலை வைத்து பயன்படுத்த வேண்டும். சாதாரணமாக 24 டிகிரி வெப்பநிலையில் இருப்பது சரியாக இருக்கும். இதன் மூலம் 6 சதவீதம் வரை மின்சார பயன்பாடு குறையும்.

ஏசியைநீண்ட நாளாக பயன்படுத்தாமல் இருந்துவிட்டு வெயில் காலம் வந்ததும் ஏசியை பயன்படுத்தும்போது, சர்வீஸ் செய்துவிட்டு பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். இதன் மூலம் மின்சாரச் செலவும் குறையும். ஏசியும் பழுது ஏற்படாமல் இயங்கும்.ஏசி ஓடிக்கொண்டிருக்கும்போது ஜன்னல் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்கக் கூடாது. இதனால், ஏசியில் இருந்து வரும் குளிர்ந்த காற்று அறையை விட்டு வெளியேறி, அறை குளிர்ச்சி அடைய தாமதம் ஆகும். இதனால் மின் நுகர்வு அதிகரித்து மின்சாரக் கட்டணமும்  கூடும்.

ஏசியுடன் மின் விசிறியையும் பயன்படுத்தினால் அறை விரைவாகக் குளிர்ந்து விடும். ஏசியால் வரும் குளிர்ந்த காற்றை ஃபேன் அறை முழுவதும் பரப்பி வேகமாகக் குளிர்விக்கும். இதனால் ஏசி இயங்கும் நேரத்தைக் குறைக்கலாம்.இப்போது மின்சாரத்தைச் சேமிக்கும் இன்வெர்ட்டர் ஏசி விற்னைக்கு வந்துவிட்டது. அதை வாங்கி பயன்படுத்தலாம். அதிக பராமரிப்புச் செலவு இல்லாத ஏசியை வாங்குவது நல்லது. ஏசியில் உள்ள வெவ்வேறு மோட்களை சரியாக பயன்படுத்தினாலும் ஓரளவு மின்கட்டணம் குறையும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News