வளிமண்டல நீர் உறிஞ்சும் இயந்திரம்.
காற்றிலிருந்து தண்ணீரை, சூரிய ஒளியை பயன்படுத்தி உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை, அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.,) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
உலோக கரிம கட்டமைப்பு (எம்.ஓ.எப்.,) பொருளைப் பயன்படுத்தி,வளிமண்டல நீர் உறிஞ்சும் இயந்திரம், உறிஞ்சுதல் செயல்முறை மூலம் காற்றிலிருந்து நீராவியை பிடிக்கிறது. 20%க்கு குறைவான ஈரப்பதம் உள்ள சூழல்களில் கூட, இந்த சாதனம் ஒரு கிலோ எம்.ஓ.எப்., பொருளுக்கு தினமும் 2.8 லிட்டர் சுத்தமான தண்ணீரை உற்பத்தி செய்ய முடியும். எம்.ஓ.எப்., என்பது வளிமண்ட லத்தில் இருந்து நீர் மூலக்கூறுகளை ஈர்த்து வைக்கும்நுண்ணிய துளையை உடைய படிக கட்டமைப்பு ஆகும்.
உலக சுகாதார நிறுவனம் ,உலகில் 220 கோடி பேருக்கு போதிய சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் என தெரிவிக்கிறது. விஞ்ஞானிகள் இந்த புதிய தொழில்நுட்பம் இத்தகைய இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
0
Leave a Reply