25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இரத்தத்தை சுத்தம் செய்யும் உணவுகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இரத்தத்தை சுத்தம் செய்யும் உணவுகள்

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஆரோக்கியமான இரத்தத்தை பராமரிப்பது முக்கியம்.. ஆரோக்கியமான சருமத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ரத்தம் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு நாம் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை மிகவும் முக்கியமானது.இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக முகப்பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் தோன்றலாம். மேலும் தூய்மையற்ற ரத்தம் ஒவ்வாமை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை தடையின்றியும், சீராகவும் கொண்டு செல்வதற்கு இரத்த சுத்திகரிப்பு முக்கியமானது. சில வகை உணவு பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் ரத்தத்தை சுத்திகரிக்கும். 

 இரத்த சிவப்பணு உற்பத்திக்கு இரும்புச்சத்து ,இரத்த சோகையைத் தடுக்க, இரும்புச்சத்து நிறைந்த கீரை, முட்டைக்கோஸ் மற்றும் சுவிஸ் சார்ட் ஆகியவை இரும்புச்சத்து சிறந்த உணவுகளாகும். கீரைகளில் வைட்டமின் கே உள்ளதால் வலுவான எலும்புகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ளூபெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் ஆகிய பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. இந்த பெர்ரிகளில் இயர்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் நிரம்பியுள்ளது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் உங்கள் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன இந்த பெர்ரிகளில் வைட்டமின் சி நிரம்பியுள்ளதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன மற்றும் இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன. 

சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன் ஆகியவை இதய ஆரோக்கியம் நிறைந்த மீன்களாகும். ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்கள் நிறைந்த இந்த மீன்களானது, வீக்கம், ட்ரைகிளிசரைடுகள் (தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள்) மற்றும் இதய நோய் அபாயம் ஆகியவற்றை குறைக்கின்றன. நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம், சியா விதைகள் மற்றும் ஆளிவிதைகள் ஆகியவற்றில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஹெல்தி ஃபாட்ஸ், ஃபைபர் மற்றும் ப்ரோட்டீன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன, இவை அனைத்தும் ஃபாட்ஸ் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. 

பீட்ரூட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆன்டிஆக்ஸிடென்ட்களின் கலவையானது, ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்வதற்கு, இரும்பு மற்றும்.. அதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் ரத்தத்தை சுத்திகரிக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். மேலும், கல்லீரலின் செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்யும்., இரத்தத்தில் ஆக்ஸிஜன் அதிகரிப்பதை மேம்படுத்துவதற்கும் சுத்திகரிப்பதற்கும் பீட்ரூட் பரிந்துரைக்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News