வெண்ணெய் புட்டு.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - 1 கப்,
வெல்லம் - 1 கப்,
பால் - 200. மி. லி,
கடலைப்பருப்பு,தேங்காய் துருவல் - தலா கால் கப்,
ஏலக்காய்துாள் - சிறதளவு ,
வெண்ணெய்,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை:
புழுங்கல் அரிசியை ஊற வைத்து, கெட்டி மாவாக அரைக்கவும். கடலைப்பருப்பை தண்ணீரில்வேக வைக்கவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். அதில் பால் ஊற்றிகொதித்ததும், அரைத்தமாவைசேர்த்துகிளறவும்.பின்,வெந்தகடலைப்பருப்பு, உப்பு, தேங்காய்துருவல் மற்றும் ஏலக்காய்துாள் துாவி கிளறி இறக்கவும். பெரிய தட்டில் வெண்ணெய் தடவி,கலவையை ஊற்றி ஆறியதும் துண்டுகளாக்கவும். சுவைமிக்க, 'வெண்ணெய் புட்டு!' தயார்.அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
0
Leave a Reply