25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


, ‘சீனாவின் குகை கிராமம்’
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

, ‘சீனாவின் குகை கிராமம்’

,சீன நாட்டில் அமைந்துள்ள ஒரு பெரிய மலையின் குகையில் ஒரு கிராமமேGuizhou மாகாணத்தில் உள்ள ஜாங்டாங் பகுதியில் அமைந்துள்ளஉள்ளது. கடல் மட்டத்திலிருந்து1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த குகையின் உள்ளே18 குடும்பங்கள் வசிக்கின்றன.நூறு பேர்கள் கொண்ட இந்த கிராமத்தை,‘சீனாவின் குகை கிராமம்’ என்று அழைக்கிறார்கள். சீனாவின் கடைசி குகை கிராமம் இது. வெளி உலகத்துடன் அதிக தொடர்பில்லாமல் இருக்கும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது.

இந்தக் குகைக்குள் வாழும் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வந்தது. ஆனால், சீன அரசு2008முதல் மக்கள் அந்தக் குகைக்குள் வாழ தடை விதித்ததுடன் அங்கு இயங்கிக் கொண்டிருந்த பள்ளியையும் மூடிவிட்டது. அது மட்டுமின்றி, அங்கிருந்து மக்களையும் வெளியேற அறிவுறுத்தியது. ஆனால், இங்குள்ள மக்கள் இந்தக் குகையை விட்டு வெளியேற விரும்பவில்லை. இங்கேயே வீடுகள் அமைத்துக் கொண்டு விவசாயம் செய்து வாழ்கின்றனர்.

கடுமையான வெப்பம் மற்றும் குளிரிலிருந்து இந்தக் குகை அவர்களை பாதுகாப்பதாகக் கூறும் இவர்கள், தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் பாடசாலையில் கல்வி பயில அனுப்புகின்றனர். இவர்கள் இரண்டரை மணி நேரம் கடந்து சென்று அருகில் உள்ள கிராமத்தில் படிக்கின்றனர். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத இந்த கிராமத்தில்2000 ஆண்டிற்கு பின்னர்தான் மின்சார வசதி வழங்கப்பட்டது.

1949ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு போரின்போது மலைப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்தக் குகையில் அடைக்கலம் புகுந்தனர். அதைத் தொடர்ந்து அங்கேயே தங்கி தங்களுக்கான வீடுகளை அமைத்துக் கொண்டு, அங்கேயே விவசாயம் செய்து வாழ்ந்து‌‌‌‌வருகின்றனர். இங்குள்ள பிள்ளைகள் மேற்படிப்புக்காக வெளியூர்களுக்குச் சென்றும் படித்து வருகின்றனர்.சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து இங்குள்ள குகை கிராமத்தைக் கண்டு வியந்து செல்கின்றனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News