பூகம்பம் குறித்து பரவும் முன் எச்சரிக்கை பதிவு.
27.08.2026 அன்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்படும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
நியூஸிலாந்து, இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, தைவான், சீனா, மியான்மர், நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் 8.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய தினத்தில் அதிக எண்ணிக்கையிலான மிதமான நிலநடுக்கங்கள் ஏற்படுவதுடன், உலகின் பல்வேறு பகுதிகளில் எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு, மேக வெடிப்பு, கனமழை, சூறாவளி மற்றும் வளிமண்டல வெப்பநிலை உயர்வு போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: நிலநடுக்கம் ஏற்படும் குறிப்பிட்ட தேதி, நேரம் மற்றும் ரிக்டர் அளவை முன்கூட்டியே துல்லியமாக கணிப்பது தற்போது அறிவியல் ரீதியாக சாத்தியமில்லை. எனவே, இதுபோன்ற தகவல்களை அதிகாரப்பூர்வ ஆதாரங்களை சரிபார்த்த பின்னரே நம்பவும், பகிரவும்.
0
Leave a Reply