25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


பூமியின் ‘இரண்டாவது நிலவு’.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பூமியின் ‘இரண்டாவது நிலவு’.

‘2025 PN7’ என்ற விண்கல், பூமியின் இரண்டாவது நிலவு போன்ற நிலையில் சூரியனைச் சுற்றி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு இயற்கையாக ஒரே ஒரு நிலவு மட்டுமே உள்ளது. பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான சராசரி தொலைவு சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர்.

இந்நிலையில், ஹவாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 2025 ஆகஸ்ட் 29-ம் தேதி ‘2025 PN7’ என்ற சிறிய விண்கல்லைக் கண்டறிந்தனர்.

இந்த விண்கல் பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகிலேயே, சூரியனைச் சுற்றி வருகிறது. பூமியுடன் ஒத்த சுற்றுப்பாதையில் பயணிப்பதால், இது ‘குவாசி மூன்’ (Quasi-Moon) எனப்படும் பூமியின் தற்காலிகத் துணை நிலவு போன்ற வகையைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்த விண்கல் கடந்த 1960-ம் ஆண்டு முதல் இதுபோன்ற சுற்றுப்பாதையில் இருப்பதாகவும், சுமார் 2083-ம் ஆண்டு வரை இந்தப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பூமியுடனான இந்தச் சுற்றுப்பாதை உறவு மாறும்.

‘2025 PN7’ விண்கல்லின் அகலம் சுமார் 62 அடி, நீளம் சுமார் 98 அடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது நிலவைவிட பூமிக்கு மிகவும் அருகில் இருப்பது போல் தோன்றினாலும், அதன் சிறிய அளவு காரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது. சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் மற்றும் வானியல் கருவிகளின் உதவியுடன் மட்டுமே இதைக் காண முடியும்.

மேலும், இந்த விண்கல்லால் பூமிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பும் பூமியுடன் இதுபோன்ற சுற்றுப்பாதை உறவை கொண்டிருந்த பல ‘குவாசி மூன்’ பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News