25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


கிடை மாடுகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிடை மாடுகள்

தமிழ்நாட்டில் நெல் முப்போகம் விளைந்த காலங்கள் உண்டு. அந்த காலகட்டத்தில் உரங்கள், பூச்சி மருந்துகள் எதுவும் இல்லை. விவசாயிகள் தங்கள் நிலத்தில் நூற்றுக்கணக்கான மாடுகளை கிடை அமர்த்தி, அந்த மாடுகள் இடும் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்தி நிலத்தை வளமாக்கி, இயற்கை முறையில் பயிர்களை விளைவித்தனர். பொதுவாக, வீட்டுக்கு வீடு மாடுகளை வளர்க்கும் வழக்கம் தமிழ்நாட்டில் இருந்தது. மாடுகளை வளர்க்கும் வீடுகளை தேடி கிடை மாடு மேய்ப்பவர் கள் வருவார்கள். அப்போது, பால் தரும் நாட்டு மாட்டு பசுக்களை மட்டும் வைத்து கொண்டு, வீட்டில் இருக்கும் காளை மாடுகள் மற்றும் இளங்கன்றுகளை அவர்களிடம் மேய்ச்சலுக்கு கொடுத்து விடுவது வழக்கம்.

இந்த மாடுகளை பகல் முழுவதும் மேய விட்டு இரவு நேரத்தில் பயிர் விளையும் நிலத்தில் ஓய்வு எடுக்க விடுவார்கள். அந்த மாடுகள் கழிக்கும் சிறுநீர், சாணம் ஆகியவற்றால் வயலுக்கு நேரடியான இயற்கை உரம் கிடைத்து விடும். இதனால் மண்ணின் தரம் உயருகிறது. அவர்கள் கிடைமாடுகளை அமர்த்தி உரம் இட்டதற்கு ஈடாக நிலத்தின் உரிமையாளர்கள் பணம் அல்லது நெல் கொடுப்பது உண்டு. நிலத்தில் ஒரு முறை கிடை போட்டால் 8 முதல் 10 ஆண்டுகள் வரை பயிர் செழித்து வளரும் என கூறுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News