25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சேமியா பாயசம் குழைந்து போய்விட்டால்...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேமியா பாயசம் குழைந்து போய்விட்டால்...

முழு ஆப்பிளை பிரிஜ்ஜில் வைப்பது நல்லது. நறுக்கிய ஆப்பிள் கலர் மாறாமல் இருக்க, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் 2 ஸ்பூன் உப்பு, எலுமிச்சை ஜூஸ் சேர்த்து அதில் ஆப்பிளை வைத்தீர்களானால் ஆப்பிள் ஆப்பிளாகவே இருக்கும்.

சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.

அடுப்பிலிருந்து பாத்திரங்களை எடுத்தவுடன், 'சிங்க்' அடியில் வைத்து குழாயைத் திருப்பிவிட்டால், அவற்றின் ஆயுள் குறையும். சூடு ஆறியதும்தான் பாத்திரங்களைக் குழாயின் அடியில் வைக்க வேண்டும்.

வீட்டு அடுக்களையில் ஒரு டம்ளரில்மண் வைத்து அதில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஊன்றி வைத்தால், துளிர் விட்டு வளர்ந்தும், அதன் வாடைக்குப் பல்லி வரவே வராது.

வெண்டைக்காய் புதியதாக இருந்தால், சமைக்கும் போது வழுவழுப்பாக இருக்கும். அதை தவிர்க்க, வெண்டைக்காய் மீது மோரையோ அல்லது புளி கரைத்த நீரையோ தெளித்தால் நன்றாக இருக்கும்.

சேப்பங்கிழங்கை வேக வைத்து தோல் உரித்த பிறகு அதை குளிர்பதனப் பெட்டியில் 2 அல்லது 3 மணி நேரம் வைக்க வேண்டும். அதன் பின், பொரித்தோமானால், ஒன்றோடு ஒன்று ஓட்டாமல், தனி தனியாகவும் மொர மொரப்பாகவும் இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News