இந்திய ஜாம்பவான் சச்சின் PCCI AWARD - வாழ்நாள் சாதனையாளர் விருது.
இந்திய ஜாம்பவான் சச்சின் 51. மும்பையை சேர்ந்த இவர், தனது 16வது வயதில் (1989) கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறி முகமானார். கடந்த 2013ல் ஓய்வு பெற்ற சச்சின், 200 டெஸ்ட் (15,921 ரன், 51 சதம்), 463 ஒருநாள் (18,426 ரன், 49 சதம்), ஒரே ஒரு 'டி-20' (10 ரன்) என,664 சர்வதேச போட் டிகளில் விளையாடினார்.
சர்வதேச அரங்கில் சதத்தில் சதம், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன், அதிக சதம் என ( பல்வேறு சாதனைகள் படைத்தார்.
சச்சினை கவுரவிக்கும் விதமாக, இந்திய கிரிக்கெட் போர்டு (PCCI) சார்பில் 'சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு' தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் முதல் கேப்டனான சி.கே. நாயுடுவை கவுரவப் படுத்தும் விதமாக கடந்த 1994 முதல், அவரது பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படு கிறது.
0
Leave a Reply