சோதனைகளை வென்று சாதனை படைக்கும் ஜோதி யாராஜி.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜோதி யாராஜி, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து இந்திய தடகளத்தின் முன்னணி வீராங்கனையாக உயர்ந்துள்ளார். தந்தை தனியார் நிறுவனத்தில் காவலாளியாகவும், தாய் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகவும் பணியாற்றிய நிலையில், கடின உழைப்பால் தடகளத்தில் தனக்கென இடம்பிடித்தார்.
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2023 உலக பல்கலைக்கழக போட்டியில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றி, 12.78 வினாடிகளில் தேசிய சாதனையும் படைத்தார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் பங்கேற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
2025-ல் ஏற்பட்ட முழங்கால் காயத்தால் அறுவை சிகிச்சை செய்து ஓராண்டு ஓய்வில் இருந்த ஜோதி, 2026 தேசிய சீனியர் தடகளப் போட்டியில் 12.99 வினாடிகளில் தங்கம் வென்று வலுவான மீள்பிரவேசம் செய்தார். இதன் மூலம் ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
0
Leave a Reply