25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்கள்/முகவர்களுடனான கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்பாளர்கள்/முகவர்களுடனான கூட்டம்

விருதுநகர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் (30.03.2024) தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா, I A S., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் மற்றும் செலவின பார்வையாளர் திரு.ரதோஷியாம் ஜஜீ, இ.வ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் செலவினங்கள் குறித்து வேட்பாளர்கள்,முகவர்களுடனான கூட்டம் நடைபெற்றது.
அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்பான முறையில் கடைபிடிக்க வேண்டும்.வழிபாட்டுத்தலங்களில் பிரச்சாரம் செய்யவோ, தனிநபர்களை விமர்சனம் செய்யவோ, இதர கட்சியினரின் பிரச்சாரங்களுக்கு இடையூறு செய்யவோ கூடாது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்வது கூடாது. ஜாதி மத உணர்வினை தூண்டும் வகையில் செயல்படக்கூடாது. இரவு 10 மணிக்குப் பின்னரும், காலை 6 மணிக்கு முன்னரும் பிரச்சாரங்கள் செய்யவோ கூட்டங்கள் நடத்தவோ கூடாது. தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் இடம் நேரம் குறித்து உள்ளூர் காவல் துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டு முன் அனுமதியும் பெறப்பட வேண்டும். உறுதி செய்யப்படாத தகவல்களை வைத்து ஒரு வேட்பாளர் மற்றொரு வேட்பாளரை விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது.

தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்பாக ஏதேனும், சந்தேகம் இருப்பின் மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆகியோரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மேலும், தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்களை வேட்பாளர்கள் அல்லது வேட்பாளரின் முகவர்கள் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நேரில் சந்திக்கலாம் என தெரிவித்தார்.
வேட்பாளர்கள் தேர்தலுக்கான செலவினத்தை தனி வங்கிக்கணக்கு மூலம் பதிவு செய்ய வேண்டும். ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.95 இலட்சம் தேர்தல் ஆணையத்தின் அறிவுத்தலின்படி சட்டப்பூர்வமாக செலவினம் செய்யலாம். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் செலவினக்கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டும். உள்ளூர் தொலைக்காட்சிகளில், ஊடக சான்றளிப்பு பெறாமல் தேர்தல் விளம்பரங்கள் ஒளிபரப்ப கூடாது.பொதுமக்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் பொது பார்வையாளர் அவர்களுக்கு  9489985882 என்ற கைபேசி எண்ணில் (அல்லது மின்னஞ்சல் முகவரி generalobs2024.dpi@gmail.com) தெரிவிக்கலாம். மேலும், தேர்தல் பொது பார்வையாளரது தொடர்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ராஜ்குமார், வட்டாட்சியர், கைபேசி எண்: 7010795006 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், நடைபெறவுள்ள மக்களைவைப் பொதுத்தேர்தலில் அனைத்து நடத்தை விதிகளை பின்பற்றி எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் நேர்மையான, அமைதியான, முற்றிலும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து வேட்பாளர்கள்/ முகவர்களை கேட்டுக்கொள்ளப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, வேட்பாளர்கள் / வேட்பாளரின் முகவர்கள்  பல்வேறு துறைகளைச் சேர்ந்த தேர்தல் பணி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News