25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


புதிதாக தொடங்கப்பட்ட துணிநூல் துறைக்கு, பொது நிர்வாகத்தில் விரிவான அனுபவம் மற்றும் துணிநூல் துறையின் வளர்ச்சிக்கு வலுவான அர்ப்பணிப்பைக் கொண்ட புதிய துணிநூல் இயக்குநராக திருமதி இரா.லலிதா, I A S, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புதிதாக தொடங்கப்பட்ட துணிநூல் துறைக்கு, பொது நிர்வாகத்தில் விரிவான அனுபவம் மற்றும் துணிநூல் துறையின் வளர்ச்சிக்கு வலுவான அர்ப்பணிப்பைக் கொண்ட புதிய துணிநூல் இயக்குநராக திருமதி இரா.லலிதா, I A S, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கைத்தறி மற்றும் துணிநூல் துறையிலிருந்து பிரிக்கப்பட்டு 21.10.2021 அன்று புதிதாக தொடங்கப்பட்ட துணிநூல் துறைக்கு, பொது நிர்வாகத்தில் விரிவான அனுபவம் மற்றும் துணிநூல் துறையின் வளர்ச்சிக்கு வலுவான அர்ப்பணிப்பைக் கொண்ட புதிய துணிநூல் இயக்குநராக திருமதி இரா.லலிதா,I A S, அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சேலம், திருப்பூர், மதுரை மற்றும் கரூர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களுடன், ஜவுளித் துறை மாநில பொருளாதாரத்திற்கு இன்றியமையாத பங்களிப்பினை வழங்குவதோடு, இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஜவுளித் துறையின் நலனை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது.

தற்போதுள்ள நலத்திட்டங்களை வலுப்படுத்துவதும், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர் ஆகிய இருதரப்பினரும் பயன் பெறும் வகையில் புத்தாக்க  முயற்சிகளுக்கு வித்திடுவதும் துணிநூல் துறையின் நோக்கமாகும்.புதிய ஜவுளித்துறை இயக்குநரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், ஜவுளித் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், புதிய தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளித்தல், தொழில்துறை மற்றும் கல்வித்துறைக்குமிடையே ஒத்துழைப்பை எளிதாக்குதல் ஆகிய முன்னெடுப்புகளின் மூலம் ஜவுளித் துறையில் புதுமையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள துணிநூல் துறை ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு தொடரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளை ஊக்குவிக்க பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிது.வேகமாக வளர்ந்து வரும் ஜவுளித் தொழிலின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக திறன் மிக்க பணியாளர்களை உருவாக்கவும், தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்சங்கங்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கவும், ஜவுளி துறையினர் மற்றும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களிடையே தொழில்நுட்ப ஜவுளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இத்துறை பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது.

ஜவுளிப் பொருட்களுக்கான சந்தை அணுகலை விரிவுபடுத்தும் பொருட்டு பன்னாட்டு வணிக கூட்டாண்மைகளை ஆராய்தல், வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்றல் மற்றும் மண்டல வாரியாக ஜவுளி நுட்பங்களை வெளிப்படுத்த டிஜிட்டல் தளங்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு  நடவடிக்கைகளை துணிநூல் துறை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.துணிநூல் துறை மாநிலத்தில் முக்கிய ஜவுளி குழுமங்கள் அமைந்துள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் நான்கு மண்டல  அலுவலகங்களுடன் இயங்கி வருகிறது.

ஜவுளித் துறை மற்றும் அதன் முயற்சிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, மண்டல துணிநூல் துணை இயக்குநர், 39, விஸ்வநாதபுரம் மெயின் ரோடு, விஸ்வநாதபுரம், மதுரை 625 014, தொலைபேசி எண்: 0452- 2530020, மின்னஞ்சல்:- ddtextilesmdu@gmail.com   தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மதுரை மண்டல துணிநூல் துணை இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News