25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இயற்கையான மாவு பூச்சி கொல்லி மருந்து
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இயற்கையான மாவு பூச்சி கொல்லி மருந்து

விவசாயி பயிரிட்டு அதை அறுவடை செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். முக்கியமாக அதில் ஒவ்வொரு பிரச்சனையை சந்திக்கும் போது தான் ஏன்டா பயிரிட்டோம் என்றுயோசிக்க வைத்து விடும். இதனை சரி செய்வதற்கு இயற்கையான மருந்துகளை  தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் .இந்த மாவு பூச்சியானது பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் 30% முதல் 40% ரை பயிர்கள் நாசம் அடைகின்றன. வறட்சியும், வெப்பமும் அதிகமாக உள்ள ளங்களில் மாவு பூச்சியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
பயிரில் மாவுப்பூச்சி தாக்கி இருந்தால் இலைகள் மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகள் வளைந்தும், நெளிந்தும், குறுத்தில் இலைகள் சிறுத்து திருகிக் கொண்டிருக்கும். இலையின் அடிப்பகுதி, குருத்து, கிளைகள் தண்டுப்பகுதிகளில் வெள்ளையாக அடை போல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும். சிவப்பு, கருப்பு எறும்புகள் காணப்படும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன் மேல் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படும். இப்பூச்சியின் தாக்குதல் அதிகளவில் இருக்கும் போது இலைகள் வாடி கருகிவிடும்.

மாவு பூச்சியை கொள்ள இயற்கையான வழிமுறை:

1. வேப்பிலை2கிலோ

2ஆடாதோடா2கிலோ

3.நொட்சி 2கிலோ

4 எருக்கு2கிலோ

5 நெய்வேலி காட்டாமனக்கு 2கிலோ

6.10 லிட்டர் மாட்டுசிறுநீர்

செய்முறை:-மேல் கூறப்பட்டுள்ள இலைகளை சிறிய சிறியதாக நறுக்கி மாட்டு கோமியத்துடன் 7 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு இதனை வடிக்கட்டி 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் செய்து வைத்துள்ள கலவையை கலந்து கொள்ளவும் இதனை பயிரில் தெளித்து விட வேண்டும்..10கிலோ இலைகளுக்கு 10 லிட்டர் மாட்டு கோமியம் சிறந்ததாக இருக்கும் மாட்டுகோமியம் பழையதாக இருக்க வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News