உதயநிதி ஸ்டாலின் பதவிப் பிரமாணம்
கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 14) தமிழக அமைச்சராக.ஆளுநர் மாளிகை தர்பார் அரங்கில் 9.30 மணியளவில் ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..
உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை,அமைச்சர் மெய்யநாதனிடம் கூடுதலாக இருந்த விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மூவரும் நிகழ்ச்சி அரங்கிற்கு ஒன்றாக வருகை தந்தனர். ‘உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்’ எனக் கூறி உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து, என்றும் பணியாற்றுவேன் என்றும் ட்விட்டரில் உதயநிதி பதிவிட்டுள்ளார்.
உதயநிதி பதவியேற்பு நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் ,துர்கா ஸ்டாலின்,கிருத்திகா உதயநிதி,சபரீசன் உள்பட எம்.பிக்கள் கனிமொழி,தயாநிதிமாறன் ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அமைச்சராக பதவியேற்ற உதயநிதிக்கு தி.முக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
0
Leave a Reply