25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


புற்றுநோயை தடுக்கும் பிளம்ஸ் பழம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புற்றுநோயை தடுக்கும் பிளம்ஸ் பழம்

மலைகளில் விளையும் பிளம்ஸ் பழம், “கொத்துப்பேரி” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பழம் சாப்பிட புளிப்பாக இருப்பதால் பலர் விரும்புவதில்லை. ஆனால் அதிக சத்து மிக்கது, இதிலுள்ள அதிகப்படியான வைட்டமின் 'சி' தான், இதன் புளிப்பு சுவைக்கு காரணம். இனிப்பு, புளிப்பு மற்றும் லேசான கசப்பு சுவை கொண்ட இப்பழத்தில், பல்வேறு வகையான பாலிபினால்கள் மற்றம் ஆக்சிஜனேற்றங்கள் இருப்பதால், கோடை மற்றும் மழை காலத்திலும் உண்ண உகந்தது.

புற்றுநோயை தடுக்கும் மருத்துவ குணம், பிளம்சில் இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். புற்றுநோயால் இறக்கும் பெண்களில், 18 சதவீதம் பேர் மார்பக புற்றுநோயின் காரணமாக இறக்கின்றனர். என்று உலக சுகாதார நிறுவனம் ஆய்வில் கண்டறிந்துள்ளது. பிளம்ஸ் பழத்தில் பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் இருப்பதால், அமெரிக்காவின், 'அக்ரிலைப்' ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.புற்றுநோய் சிகிச்சையின் போது, புற்றுநோய் செல்களுடன் உடலில் உள்ள மற்ற செல்களும், அழிக்கப்பட்டு விடுவதால், நோயாளிகளின் உடல் சோர்ந்து போகிறது. ஆனால், பிளம்ஸ் பழத்தில் உள்ள பிளோலிக் அமிலத்தின் கூட்டுப் பொருளான, குளோரோ ஜெனிக் மற்றும் நியோகுளோரோஜெனிக் அமிலங்கள், உடலில் எந்த விதமான பாதிப்பு இல்லாமல் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிப்பதாக கூறுகின்றனர்.

இந்த ரசாயனங்கள் மற்ற சில பழங்களில் இருந்தாலும், பிளம்ஸ் பழத்தில் மிகுதியாக இருப்பதாக, ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பிளம்ஸ் பழத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட், நம் உடலில் செல் திசுக்கள் வேகமாக அழிவதை தடுக்கம். இதனால் முதுமையை தள்ளிப் போட உதவுகிறது. இந்த காரணத்தால், இதை பெண்களின் பழம் என்கின்றனர்.ரத்தத்தை சுத்திகரித்து, நம் உடலை ஆராக்கியமாக வைப்பதற்கு உதவுகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ரத்த சோகையை தடுக்கிறது. எனவே, ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும் பெண்கள், பிளம்ஸ் பழத்தை சாப்பிடலாம்.

டைப் 2 நீரிழிவு நோய் உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. பிளம்சில் உள்ள பைட்டோ நியூட்ரியன்கள், ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. பொட்டாசியத்தின் வளமான மூலமாக திகழ்கிறது. பிளம்ஸ், பொட்டாசியம் தான் இதயத்துடிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. இது, ரத்த அழுத்தத்தின் ஆரோக்கியமான அளவை பராமரிக்க உதவுகிறது.பிளம்சில் உள்ள ஆன்டி ஆக்சிடன்கள், சரும தோற்றத்தை காத்து, புத்துணர்ச்சி பெற வைக்கிறது. இளமையான சரும் அழகை பெற பிளம்ஸ் பழத்தை சாப்பிட்டு வாருங்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News