தன்னலமற்ற தியாகிகளான மரங்களை கடவுளாகப் போற்றி, மதித்து மரியாதை செய்யலாமே!
மரத்தில் ஆணி அடிப்பதை தவிர்ப்பது மிகமிக முக்கியம்.
மண்ணுக்கும் மரம் தான் உரம்,மழைக்கும் மரம் தான் உரம்.
மனிதா கோடாரியை தூர எறி, மரம் காக்கும் புதுக்கொள்கை தரி.
உண்ணக் கனி ஒதுங்க நிழல்.
உடலுக்கு மருந்து, உணர்வுக்கு விருந்து
அடையக் குடில், அடைக்கக் கதவு அழகு வேலி ,ஆடத் தூளி, தடவத் தைலம், தாளிக்க எண்ணெய் எழுதக் காகிதம், எரிக்க விறகு,
மரம் தான், மரம் தான், எல்லாம் மரம்தான், மறந்தான், மறந்தான், மனிதன் மறந்தான். மரம் ஓர் தியாகி தன்னை வெட்ட வந்த கோடாரிக்கு, கைபிடியாய் தன்னையே கொடுத்ததே .
பூமிப்பந்தில் தெரியும் நீல நிறம் மீன்கள் வாழுமிடம் .
மரங்கள் பசுமை நிறம் மனிதன் வாழுமிடம்.
மரம் இல்லா வாழ்க்கை மரண வாழ்க்கை.
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
ஒருமரம் ஒரு வருடத்திற்கு 118 கிலோ ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. ஒரு ஏக்க ஏக்கரில் உள்ள மரங்களில் இருந்து, ஒரு வருடத்தில் கிடைக்கும் ஆக்ஸிஜன் 18 மனிதர்கள் ஆயுள் முழுவதும் சுவாசிக்க உதவுகிறது.ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் 2.6 டன் கார்பன்டை ஆக்ஸைடை காற்றிலிருந்து உறிஞ்சிக் கொள்கின்றன.நிழல் தரும் ஒரு மரம், வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்கின்றன.
0
Leave a Reply