25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அலக்நந்தா ஆறும், பாகிரதி ஆறும் சந்தித்து பின்பு கங்கை ஆற்றில் சென்று கலக்கின்றது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அலக்நந்தா ஆறும், பாகிரதி ஆறும் சந்தித்து பின்பு கங்கை ஆற்றில் சென்று கலக்கின்றது

அட்லான்டிக் பெருங்கடலும், பசிபிக் பெருங்கடலும் ஒன்றோடு ஒன்று சேராது தெரியுமா? இரண்டு கடல்களுக்கும் இருக்கும் வெவ்வேறு நீரின் அடர்த்தி, வெப்பம், உப்புத்தன்மையே இதற்கு காரணமாகும்.இதுபோன்று இந்தியாவிலும் ஒரு அதிசயம் நிகழ்கிறது. இங்கே உள்ள இரண்டு ஆறுகள் கலந்தாலும் ஒன்று சேருவதில்லை. இந்தியாவில் உத்திரகாண்ட் மாநிலத்தில் தேரி கார்வால் மாவட்டத்தில் தேவ்பிரயாக் என்னும் இடத்திலே இந்த இரண்டு நதிகளின் சங்கமம் நிகழ்கிறது. இங்கு தான் அலக்நந்தா ஆறும், பாகிரதி ஆறும் சந்தித்து பின்பு கங்கை ஆற்றில் சென்று கலக்கின்றது.

.அலக்நந்தா ஆறு சதோபாந்த் அடிவாரத்தில் பத்திரிநாத்திலிருந்துஉருவாகி வருகிறது. பாகிரதி கௌமுக் அடிவாரத்தில் கங்கோத்ரியிலிருந்து உருவாகி வருகிறது. இந்த இரண்டு ஆறுகளும் சேர்ந்து தான் கங்கையை உருவாக்குகிறது. அலக்நந்தா ஆறு சற்று மண் கலந்த நிறமாக இருக்கும். இதுவே பாகிரதியோ பச்சைபசேலென்று அழகாக இருக்கும். இந்த இரண்டு நதிகளுமே ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தேவபிரயாக் ரிஷிகேஷில் இருந்து70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து2723 அடி உயரத்தில் உள்ளது.இங்கிருக்கும் புனிதமான நீரூற்றான பைத்தல்ஷிலா(Baitalshila) மருத்துவ குணங்களை கொண்டது என்று கூறுகிறார்கள். அதனால் பக்தர்கள் இவ்விடத்திற்கு வந்து இந்த நீரூற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News