தி இந்தியா 'ஏ' அணி சாம்பியன்!
இலங்கையில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் ,இறுதிப்போட்டியில் இந்தியா 'ஏ' அணி அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
தம்புலா மைதானத்தில் நேற்று நடைபெற்ற பைனலில், இந்தியா 'ஏ' மற்றும் இலங்கை 'ஏ' அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை 'ஏ' அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 'ஏ' அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்து வலுவான இலக்கை நிர்ணயித்தது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வெறும் 11 பந்துகளில் அரைசதம் விளாசி உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
378 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை 'ஏ' அணி, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 47.1 ஓவர்களில் 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா 'ஏ' அணி, முத்தரப்பு தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
0
Leave a Reply