டி.என்.பி.எல்.: திருப்பூர் அணி வெற்றி.
திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற டி.என்.பி.எல். லீக் போட்டியில் சேப்பாக்கம் மற்றும் நடப்பு சாம்பியன் திருப்பூர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திருப்பூர் கேப்டன் சாய் கிஷோர், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த சேப்பாக்கம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய திருப்பூர் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் நெல்லை மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற நெல்லை அணி கேப்டன் சோனு யாதவ், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து நெல்லை அணியின் பேட்டிங் தொடர்கிறது.
0
Leave a Reply