மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று பல்வேறு சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று பல்வேறு சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக பங்கேற்றனர். “ஒவ்வொரு வாக்கும் முக்கியம்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் அனைவரும் "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
மேலும், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்குரிமையின் அவசியம் மற்றும் ஜனநாயகத்தின் வலிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்த பல்வேறு கோஷங்கள் முழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் இணைந்து மனித சங்கிலி அமைத்து, 100% வாக்குப்பதிவை உறுதி செய்வோம் என்ற ஒற்றுமைச் செய்தியை வெளிப்படுத்தினர். மேலும், நவதானியங்கள் கொண்டு அமைக்கப்பட்ட கோலம் மூலம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.இந்நிகழ்வின் போது, வரவிருக்கும் தேர்தலில் அனைவரும் தங்களின் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்தி, 100% வாக்குப்பதிவை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
0
Leave a Reply