25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று பல்வேறு சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று பல்வேறு சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விருதுநகர் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று பல்வேறு சிறப்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிகளில் அரசு அலுவலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உற்சாகமாக பங்கேற்றனர். “ஒவ்வொரு வாக்கும் முக்கியம்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் அனைவரும் "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல" மற்றும் "ஜனநாயகக் கடமையை தவறாமல் ஆற்றுவேன்" என்ற உயரிய நோக்கை வலியுறுத்தி, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் இணைந்து நேர்மையாகவும், தவறாமலும் வாக்களிப்போம் என விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும், நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்குரிமையின் அவசியம் மற்றும் ஜனநாயகத்தின் வலிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில், வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்த பல்வேறு கோஷங்கள் முழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் இணைந்து மனித சங்கிலி அமைத்து, 100% வாக்குப்பதிவை உறுதி செய்வோம் என்ற ஒற்றுமைச் செய்தியை வெளிப்படுத்தினர். மேலும், நவதானியங்கள் கொண்டு அமைக்கப்பட்ட கோலம் மூலம் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.இந்நிகழ்வின் போது, வரவிருக்கும் தேர்தலில் அனைவரும் தங்களின் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்தி, 100% வாக்குப்பதிவை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News