தேசிய கீதம் பற்றி….
1. இந்திய தேசிய கீதத்தை ஏறக்குறைய 52 விநாடிகளில் பாடி முடிக்க வேண்டும்.
2. இந்திய அரசியலமைப்புக் குழு 1950 ஜனவரி 24-இல் 'ஜன கண மன...' பாடலை நாட்டின் தேசிய கீதமாக அங்கீகரித்தது.
3.தாகூர் வங்காள மொழியில் எழுதிய பாடலின் இந்தி மொழிபெயர்ப்பே அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
4.1911, டிசம்பர் 27-ஆம் தேதி கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில்தான் இது முதன் முதலாகப் பாடப்பட்டது (மகாநாட்டின் இரண்டாம் தினம்). முதல்நாளில் வந்தே மாதரம் பாடலே பாடப்பட்டது.
5. 1912 -இல் தாகூரின் தத்துவபோதினி பத்திரிகையில் பாரத விதாதா என்னும் தலைப்பின் கீழ் இது வெளியிடப்பட்டது.
6. 1919 - The Morning Song of India எனும் தலைப்பில் தாகூரே இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
0
Leave a Reply