25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


கோடை  வெயிலால் முகம் கருத்துப் போவதைத் தடுக்க ரோஸ் வாட்ட ர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோடை வெயிலால் முகம் கருத்துப் போவதைத் தடுக்க ரோஸ் வாட்ட ர்

கோடை வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலால் சருமத்தின் நிறம் கருமையாகத் தொடங்கிவிடும். நீங்கள் வெளியே அதிகம் சுற்றுபவராக இருந்தால், இந்த கோடை வெயிலால் சருமத்தின் நிறம் மாறாமல் இருக்க வேண்டுமெனில், சருமத்திற்கு பராமரிப்புக்களை தவறாமல் கொடுத்து வர வேண்டும்.தினமும் சருமத்திற்கு ஒருசில பராமரிப்புக்களை தவறாமல் கொடுப்பதன் மூலம் சரும செல்கள் ஆரோக்கியமாக இருப்பதோடு, சரும நிறமும் மேம்படுவதுடன் சருமம் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அப்படி சரும நிறத்தை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் ரோஸ் வாட்டர்.இந்த ரோஸ் வாட்டரைக் கொண்டு தினமும் இரவு முகத்திற்கு ஒருசில ஃபேஸ் பேக்குகளை போட்டு வந்தால், வெயிலால் முகம் கருமையாவது தடுக்கப்படுவதோடு, சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் இருக்கும். இப்போது சரும நிறத்தை அதிகரிக்க உதவும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்குகள்.

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் 

தேவையான பொருட்கள்: * 

முல்தானி மெட்டி பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் * 

ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: *  முதலில் ஒரு பௌலில் முல்தானி மெட்டி பவுடரை எடுத்து, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

காபி பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் 

தேவையான பொருட்கள்: * 

காபித் தூள் - 2 டேபிள் ஸ்பூன் * 

ரோஸ் வாட்டர் - 2-3 டேபிள் ஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: * ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வர, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் 

தேவையான பொருட்கள்: * 

சந்தன பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் * 

ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை: * ஒரு பௌலில் சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் 

தேவையான பொருட்கள்: * 

கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் * 

ரோஸ் வாட்டர் - 3 டேபிள் ஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: * முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம், கழுத்து, கைகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

கற்றாழை மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் 

தேவையான பொருட்கள்: * 

கற்றாழை ஜெல் - 2 டேபிள் ஸ்பூன் * 

ரோஸ் வாட்டர் - 2 டேபிள் ஸ்பூன் 

பயன்படுத்தும் முறை: * முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். * பின் அதை முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். * பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை தினமும் இரவு பயன்படுத்தி வந்தால், முகம் கருத்துப் போவதைத் தடுக்கலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News