சங்கரன்கோவில் முக்கிலிருந்து புது பஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மெயின் ரோடு வரை தடுப்பு சுவர் அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
இராஜபாளையம் சங்கரன்கோவில் முக்கிலிருந்து புது பஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மெயின் ரோடு உள்ளது. இதனை ஒட்டி 20 அடி அகலம் 10 அடி ஆழம் கொண்ட மழை நீர் கால்வாய் புது பஸ்டாண்ட் எதிரே உள்ள புதியாதிகுளம் கண்மாயில் கலக்கும் விதமாக அமைந்துள்ளது. I
சங்கரன்கோவில் முக்கில் தொடங்கி சிங்கத்திருளப்ப சுவாமி கோவில் வரை, பெரும் பகுதி இடங்களில் தடுப்புச் சுவர் இல்லாததால் ரோட்டில் இருந்து ஒதுங்கும்போது, கால்வாயில் விழுந்து காயம் அடைவது தொடர்கதை ஆகிறது. இரவு நேரங்களில் சாலையை ஒட்டி உள்ள கால்வாய் இருப்பதை வாகன ஒட்டிகள் அருகில் வந்தால் மட்டுமே காண முடியும். இதுவரை பல உயிர் பலிகள் ஏற்பட்டுள்ள நிலையில் தடுப்பு கம்பி அல்லது தடுப்புச் சுவர் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply