தேவையான பொருட்கள் - பிரண்டை நறுக்கியது - 2 கப் ,ஜவ்வரிசி - 500 கிராம் ,சீரகம் - 2 தேக்கரண்டி ,எலுமிச்சம் பழம் - 3,பச்சை மிளகாய் - 10,எண்ணெய்,சமையல் சோடா,உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:ஜவ்வரிசியை,10 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரில் காய்ச்சவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் சீரகம், பச்சை மிளகாய், பிரண்டையை வதக்கவும். ஆறியதும் அரைத்து, காய்ச்சிய ஜவ்வரிசியுடன் சேர்த்து கொதிக்க விடவும். பின், உப்பு, எலுமிச்சம் பழச்சாறு, சமையல் சோடா சேர்த்து கிளறி ஆறவிடவும்வெயிலில் சுத்தமான பருத்தி துணியை விரித்து ஆறிய கலவையை சிறிது சிறிதாக ஊற்றி காய வைக்கவும். நலம் தரும் பிரண்டை வடகம்' தயார். எண்ணெயில் பொரித்து மதிய உணவுடன் சாப்பிட சுவை அபாரமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் - கேழ்வரகு - 1 கிலோ, உப்பு - இரண்டு தேக்கரண்டி.செய்முறை: கேழ்வரகை ஊறவைத்து, கிரைண்டரில் அரைக்கவும்.1 கிலோ கேழ்வரகிற்கு,20 கப் நீர் ஊற்றி, பாலை பிழிந்து எடுக்கலாம். இரவு முழுவதும் இந்தப் பாலைப் புளிக்க வைத்து, மறுநாள் காலை நன்கு கலக்கி, அடுப்பில் வைத்துக் கைவிடாமல் நன்கு கிளறவும்.கண்ணாடி போல் வெந்து வந்ததும், உப்பு சேர்த்து கலக்கி இறக்கவும். கையை நீரில் நனைத்து மாவை தொட்டால், ஒட்டாமல் இருக்க வேண்டும். இதுவே பதம்.காட்டன் துணியை நீரில் நனைத்து, பாய் மேல் விரித்து, கேழ்வரகு கூழைக் கரண்டியால், வடகம் போல் ஊற்றி, தடவி காய விடவும். மாலையில், துணியை திருப்பிப் போட்டு நீர் தெளித்து, வடகங்களை தனியாக எடுக்கவும். நான்கு நாட்கள் வெயிலில் காயவைத்து, பொரித்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் - உளுந்து - இரண்டு கப், சின்ன வெங்காயம் - 1 கிலோ, பூண்டு 50 கிராம், கடுகு - ஒரு தேக்கரண்டி, சீரகம் - இரண்டு தேக்கரண்டி, ஜவ்வரிசி 50 கிராம், வரமிளகாய் -20 அல்லது மிளகாய்த்துாள் - ஒரு தேக்கரண்டி, உப்பு - இரண்டு தேக்கரண்டி, கறிவேப்பிலை இரண்டு கைப்பிடி. செய்முறை: உளுந்தை ஊற வைத்து,நீர் இல்லாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும். வரமிளகாயையும் ஊறவைத்து நீரில்லாமல் அரைத்து, இதில் சேர்க்கவும் அல்லது மிளகாய் பொடியைப் போட்டுக் கொள்ளவும்.ஜவ்வரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, வடித்து இதில் போடவும். சீரகம் மற்றும் கடுகை சேர்க்கவும். தேவையான உப்பை சேர்க்கவும். கறிவேப்பிலை, பூண்டு, சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து, பொடிப் பொடியாக நறுக்கி சேர்க்கவும். அனைத்தையும் நன்கு பிசைந்து கொள்ளவும்.பாயை விரித்து, அதன் மேல் காட்டன் துணி அல்லது புடவையை நனைத்து பிழிந்து போடவும். இதில்,கறிவடக மாவை எடுத்து கிள்ளி, கிள்ளி வைக்கவும். மாலையில் காய்ந்ததும் தாம்பாளத்துக்கு மாற்றித் திருப்பி வைக்கவும். நான்கைந்து நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்துப் பத்திரப்படுத்தவும். தயிர் சாதம், சாம்பார் சாதத்துக்கு இதை பொரித்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் - பச்சரிசி - 1 கிலோ, உப்பு - இரண்டு தேக்கரண்டி.செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து,உப்பு சேர்த்து, முதல் நாள் இரவே அரைத்து வைக்கவும்.மறுநாள் காலை ஒரு பெரிய பாத்திரத்தில், ஆறு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சிறிது வெந்நீரை எடுத்து அரைத்தமாவில் சேர்த்து கரைத்து, கொதிக்கும்போது மெதுவாக ஊற்றியபடி கிளறவும். கண்ணாடி போல் வெந்து, ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும்.ஈரமான காட்டன் துணியை, பாய் மேல் விரித்து வைக்கவும். கூழ் மாவை ரிப்பன் பகோடா அச்சில் போட்டு நீளமாக பிழியவும். வெயிலில் நன்கு காய்ந்ததும், மாலையில் துணியைத் திருப்பி போட்டு தண்ணீர் தெளித்து, உரித்து எடுக்கவும். நறுக்கி நான்கு நாட்கள் காய வைத்து எடுக்கவும். இதை பொரித்து சாப்பிடலாம்.
தேவையானவை- பச்சரிசி -1 கிலோ,உப்பு - தேவையான அளவு, ஜவ்வரிசி -100 கிராம், 'ரெட் புட்' கலர் மற்றும் 'க்ரீன் புட்' கலர் - சிறிதளவு.செய்முறை: பச்சரிசியை ஊற வைத்து,உப்பு சேர்த்து முதல் நாள் இரவே அரைத்து வைக்கவும். ஜவ்வரிசியை மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும்.மறுநாள் காலை, பெரிய பாத்திரத்தில், நான்கு மடங்கு தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். ஜவ்வரிசி மாவைக் கரைத்து ஊற்றிக் கொதிக்கும் போது, அரைத்த பச்சரிசி மாவையும் ஊற்றிக் கிளறவும். கண்ணாடி போல் வெந்து ஒட்டாத பதம் வந்ததும் இறக்கவும்.ஈரமான காட்டன் துணியைப் பாய் மேல் விரித்து வைக்கவும். கூழ்மாவை, மூன்று பங்காக பிரித்து, ஒன்றை வெள்ளையாகவேவைக்கவும். இரண்டாவதில், 'ரெட் புட்' கலரும், மூன்றாம் பங்கில், 'க்ரீன் புட்' கலரும் சேர்த்து, நன்கு கலக்கவும்.மாவைக் கரண்டியில் எடுத்து ஊற்றித் தடவவும். வெயிலில் நன்கு காய்ந்ததும் மாலையில், துணியைத் திருப்பிப் போட்டுத் தண்ணீர் தெளித்து உரித்து எடுக்கவும். நான்கு நாட்கள் காயவைத்து பொரித்து சாப்பிடலாம்.
தேவையானவை : நெல்லிக்காய் - 100 கிராம், இஞ்சி -100 கிராம், பூண்டு -50 கிராம்,வெல்லம் - சிறிது,மிளகாய்த் தூள் - 3 டேபிள் ஸ்பூன்,மஞ்சள்தூள் - 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் - சிறிதாக வறுத்துப் பொடித்தக்கொள்ளவும். நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,உப்பு - தேவையான அளவுசெய்முறை:முதலில் இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும் எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி பூண்டு விழுது, வேகவைத்து மசித்த நெல்லி, வெல்லம், மிளகாய்த்தூள் மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம் சேர்த்து எண்ணெய் மிதக்கும் வரை வதக்கி எடுத்தால் சுவையான இஞ்சி நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி.
தேவையான பொருட்கள் ; 1கப்பூண்டு பல், 6 வரமிளகாய்,அரை ஸ்பூன்கடுகு,கால்ஸ்பூன் வெந்தயம்,தேவைக்கு உப்பு, கால்ஸ்பூன் பெருங்காயம்,கால்ஸ்பூன் மஞ்சள்,தாளிக்க ;கால்ஸ்பூன்கடுகு,1 வரமிளகாய்,1 கொத்து கருவேப்பிலை,தேவைக்கேற்ப நல்லெண்ணெய்செய்முறை -முதலில் பூண்டு உரித்துக்கொள்ளவும்.பின் கடுகு, வெந்தயம் வறுக்கவும்.அதிலேயே வரமிளகாய் சேர்த்து வறுக்கவும்.பின் அதிலேயே உப்புசேர்க்கவும். ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.புளியை வென்னீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.பின் வாணலியை அடுப்பில்வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும்.அதில் கடுகுபோட்டு பொரிந்ததும்,வரமிளகாய், கருவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.அரைத்த பொடியைப் போடவும்.பின் மஞ்சள்பொடி சேர்க்கவும்.நன்கு கலந்துவிடவும்.பின் புளிகரைசலை ஊற்றவும்.நன்கு கொதிக்கவிடவும்.பின் அடுப்பை சிம்மில்வைத்து விடவும்.வெல்லத்தூள் அரைஸ்பூன் சேர்க்கவும்.பெருங்காயம் கால்ஸ்பூன்சேர்க்கவும்.பூண்டு புளி கரைசலோடு சேர்ந்து எண்ணெய் பிரிந்து வரும். அப்போது பூண்டுஊறுகாய் ரெடி.தயிர் சாதம், சப்பாத்தி, தோசை,இட்லிக்கு அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள் - 6 கப் மாங்காய் துண்டுகள், 1கப் மிளகாய்த்தூள், 1கப் கடுகுத்தூள்,1 கப் கல்லுப்பு,2 கப் நல்லெண்ணெய், 1/2 கப் வெந்தயம்,மஞ்சள் தூள் செய்முறை –நல்ல தோல் கட்டியாக இருக்கிற மாங்காய் வாங்கி நன்கு கழுகி துடைத்து தோலுடன் பெரிய துண்டாக கட் பண்ணி வெச்சுக்கவும். ஈரம் இருக்கவே கூடாது.இந்த மாங்காய் அளவு6:1 விகிதத்தில் கலந்துக்கவும் ஒரு பரந்த பாத்திரத்தில் எல்லா பொடிகளையும் முதலில் கலந்துக்கவும். உப்பு, மிளகாய் தூள், கடுகுத்தூள், வெந்தயம், மஞ்சள்தூள்,எண்ணெய் எல்லாம் நல்லா கலந்து வெச்சுக்கவும்.ஊறுகாய் போடப்போகும் ஜாடியில் இந்தக்கலவை போட்டு மேலே மாங்காய் துண்டுகளை போட்டு(layer) நன்றாக கிளறி மூடி வெச்சுடவும். ரெண்டு நாள் கழிஞ்சு திரும்பவும் கிளறி கொடுக்கவும். இதேபோல் விட்டு, விட்டு கிளறிகொடுத்து,15 நாள் கழிஞ்சு பார்த்தால் மாங்காய் நன்கு ஊறி எண்ணெய் மேலே எழும்பி இருக்கும்.இப்போ ஆவக்காய் ஊறுகாய் சாப்பிட தயார். இந்த ஊறுகாயை, 1 வருஷம் வரை வைத்திருந்து சாப்பிடலாம் கெட்டு போகாது.இந்த ஊறுகாய்க்குpreservative ஆக கடுகும், உப்பும், எண்ணெய் மட்டும் தான்.
தேவையான பொருட்கள் - 1 கப்சுத்தம் செய்து நறுக்கின பிரண்டை,1/4 கப் நறுக்கின பெரிய வெங்காயம் ,2டேபிள்ஸ்பூன் தோலுரித்து நறுக்கின பூண்டு,1டீ ஸ்பூன் ம.தூள், 2 ஸ்பூன் காஷ்மீரி மி.தூள்,தேவைக்குகல்லுப்பு, 2 1/2ஸ்பூன் கடுகு,1ஸ்பூன் வெந்தயம்.2 சி.மிளகாய்,1 ஆர்க்குகருவேப்பிலை, 1 ஸ்பூன்பெருங்காயத் தூள், 1/4 கப் ந.எண்ணெய்,.1 கோலி குண்டளவு புளி செய்முறை –பிரண்டையை நன்கு சுத்தம் செய்து, நறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம், பூண்டை நறுக்கிக் கொள்ளவும். வெறும் கடாயில், கடுகு, வெந்தயத்தை நன்கு வறுக்கவும்.வறுத்து தட்டில் ஆற விடவும்.சிறிய மிக்ஸி ஜாரில் போட்டு,சற்று கொரகொரப்பாக பொடித்து தட்டில் போடவும்.அடுப்பைமீடியத்தில்வைத்து,ந.எண்ணெய்காய்ந்ததும்,வெங்காயம், புளி,பூண்டை போட்டு நன்கு வதக்கவும்.பௌலில் ஆற விடவும்.பின், மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.கடாயில்,மீதமான ந.எண்ணெயில், பிரண்டையை நிறம் மாறும் வரை நன்கு வதக்கவும்.அரைத்த விழுதுடன், வதக்கிய பிரண்டையை போட்டு நன்கு அரைக்கவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகை போடவும்.கடுகு பொரிந்ததும், மிளகாய், கருவேப்பிலை தாளிக்கவும்.தாளித்த எண்ணெயில், ம.தூள், மி.தூள், உப்பு போட்டு நன்கு, வதக்கவும்.அடுத்து வதக்கிய விழுதை போட்டு ஒன்று சேர சுருள வதங்கியதும், அடுப்பை நிறுத்தி விடவும்.பிறகு, வறுத்த பொடி, பெருங்காயத் தூள் போட்டு கிளறவும்.அடுத்து,பௌலுக்கு, மாற்றி, மேலே காய்ச்சாத ந.எண்ணெயை விடவும். இப்போது, சுவையான, ஆரோக்கியமான, கிராமத்து பிரண்டை ஊறுகாய் தயார்.
தேவையான பொருட்கள் - 2 கப் சாம்பார் சின்னவெங்காயம் உரித்தது. ஒரு பெரிய நெல்லிக்காய்அளவு புளி,வெல்லப்பாகு1கரண்டி,தேவைக்கு உப்பு,தேவைக்கு நல்லெண்ணெய்,வரமிளகாய் , அரைஸ்பூன் பெருங்காயம்,1ஸ்பூன் கடுகு, அரைஸ்பூன் வெந்தயம்செய்முறை –முதலில்சின்னவெங்காயத்தைஉரித்து வைத்துக்கொள்ளவும்.கடுகு,வெந்தயம்வறுத்து அரைப்பதற்கு எடுத்து வைக்கவும். ஊறுகாய்போடுவதற்கு கடுகு,வெந்தயப்பொடி தான் ஸ்பெசல்.புளியை தண்ணீரில் சிறிதுநேரம்ஊறவைத்துக்கொள்ளவும்.மிக்ஸி ஜாரில்,வெங்காயம்,வரமிளகாய்,புளிமூன்றையும் அரைக்கவும். கடுகு,வெந்தயம்வறுத்து பொடிபண்ணிக்கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து, பின்பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுபின்பெருங்காயப்பொடிசேர்க்கவும்.உப்புசேர்க்கவும்.நன்குகொதிக்கவிடவும்.பின்னர்வெல்லப்பாகுசேர்க்கவும். நன்கு கொதிக்கவிடவும்.பின் இறக்கிவைக்கும் போது வெந்தயப்பொடி, காயப்பொடி சேர்த்து உடனே கேஸை ஆப் செய்து விடவும்.எண்ணெய்பிரிந்துஅழகாகஊறுகாய் பளபள வென்று இருக்கும்.வெங்காய ஊறுகாய் ரெடி.இந்தவெங்காயஊறுகாய் இட்லி,தோசை,சப்பாத்தி, சாதம்எதற்கும் ஏற்ற தாகஇருக்கும்.