25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சின்னவெங்காயஊறுகாய் (shallots pickel)
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சின்னவெங்காயஊறுகாய் (shallots pickel)

தேவையான பொருட்கள் - 

 2 கப் சாம்பார் சின்னவெங்காயம் உரித்தது. ஒரு பெரிய நெல்லிக்காய்அளவு புளி,வெல்லப்பாகு1கரண்டி,

தேவைக்கு உப்பு,தேவைக்கு நல்லெண்ணெய்,வரமிளகாய் , அரைஸ்பூன் பெருங்காயம்,1ஸ்பூன் கடுகு, அரைஸ்பூன் வெந்தயம்

செய்முறை –

முதலில்சின்னவெங்காயத்தைஉரித்து வைத்துக்கொள்ளவும்.கடுகு,வெந்தயம்வறுத்து அரைப்பதற்கு எடுத்து வைக்கவும். ஊறுகாய்போடுவதற்கு கடுகு,வெந்தயப்பொடி தான் ஸ்பெசல்.

புளியை தண்ணீரில் சிறிதுநேரம்ஊறவைத்துக்கொள்ளவும்.மிக்ஸி ஜாரில்,வெங்காயம்,வரமிளகாய்,புளிமூன்றையும் அரைக்கவும். கடுகு,வெந்தயம்வறுத்து பொடிபண்ணிக்கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து, பின்பெருங்காயம் சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுபின்பெருங்காயப்பொடிசேர்க்கவும்.உப்புசேர்க்கவும்.நன்குகொதிக்கவிடவும்.பின்னர்வெல்லப்பாகுசேர்க்கவும். நன்கு கொதிக்கவிடவும்.பின் இறக்கிவைக்கும் போது வெந்தயப்பொடி, காயப்பொடி சேர்த்து உடனே கேஸை ஆப் செய்து விடவும்.எண்ணெய்பிரிந்துஅழகாகஊறுகாய் பளபள வென்று இருக்கும்.வெங்காய ஊறுகாய் ரெடி.

இந்தவெங்காயஊறுகாய் இட்லி,தோசை,சப்பாத்தி, சாதம்எதற்கும் ஏற்ற தாகஇருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News