தேவையான பொருட்கள்:உருளைக்கிழங்கு -2பச்சை மிளகாய் -4மக்காச்சோள மாவு - 2 தேக்கரண்டிவெள்ளை ரவை 2 தேக்கரண்டிஇஞ்சி,உப்பு,எண்ணெய்,கொத்தமல்லி தழை,தண்ணீர்தேவையான அளவு.செய்முறை:உருளைக்கிழங்கை, நீரில் வேக வைத்து தோலுரிக்கவும். அதனுடன், துண்டாக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய கொத்தமல்லி தழை, வெள்ளை ரவை, அரைத்த இஞ்சி, மக்காச்சோள மாவு, உப்பு சேர்த்து பிசையவும். அதை சிறிய உருண்டைகளாக பிடித்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சுவைமிக்க, 'உருளைக்கிழங்கு சாப்ஸ்!' தயார். அனைத்து வயதினரும் விரும்பி உண்பர்.
முக்கால் கப் துவரம்பருப்பு, அரை கப் பாசிப்பருப்பு, கால் கப் புழுங்கல் அரிசியைக் கழுவி, 2-3 மணி நேரம் ஒன்றாக ஊறவைக்கவும்.பிறகு ஊறவைத்தவற்றுடன் 2 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.மாவைப் பெரிய பாத்திரத்தில்சேர்த்து இதனுடன் நறுக்கிய வெங்காயம், ஒரு கப் முருங்கையிலை, அரை டீஸ்பூன் பெருங்காயத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலக்கவும் தவாவை சூடாக்கி, மாவைத் தோசை போல வார்த்து ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு இருபுறமும் சுட்டெடுக்கவும். விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
3கப் கோதுமை மாவு இதனுடன் 1 ஸ்பூன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து, புரோட்டா மாவு ரெடி செய்து, 30 நிமிடம் ஊறவைக்கவும் .பிறகு இந்த மாவை உருண்டை பிடித்து அதை பெரிய ரவுண்டாக தேய்க்கவும் பின் அதை கட்டமாக மடிக்கவும் இருபுறமும் எண்ணெய் தடவி தோசைக்கல்லில் வேக வைக்கவும் எளிமையான கோதுமை சிலோன் புரோட்டா ரெடியாகும் மேலும் கோதுமை பதில் மைதா மாவு பயன்படுத்தியும் இதுமாதிரி புரோட்டா செய்யலாம்.
தேவையான பொருட்கள் - ராகி -2 கப்,புழுங்கல்அரிசி -1 கப்,உளுந்தம்பருப்பு அரைகப்,உப்பு - தேவைக்கு ,எண்ணெய் - தேவைக்கு ராகி தோசை செய்முறை - முதலில்ராகி,அரிசி, உளுந்தம்பருப்பு மூன்றையும் 2 மணி நேரம்தண்ணீர் ஊற்றி ஊறவிடவும்.பின் மிக்ஸிஅல்லது கிரைண்டரில் நன்கு அரைத்துக் கொள்ளவும்ஆட்டும்போதே தேவையானஉப்புச் சேர்த்துக்கொள்ளலாம். 4 மணி நேரம் இருக்கட்டும்.பின் தோசைவாணலியில் தோசை சுட்டு சாப்பிடவும். வெங்காயம் சிறிதாககட் பண்ணி தோசையில்போட்டுசாப்பிடலாம் தக்காளி, வெங்காயம், தேங்காய்சட்னிகள் ராகி தோசைக்கு நன்றாக சுவையாக இருக்கும்.
கருப்பு சுண்டல் - 1 கப்,பச்சை பயிறு - 1கப் எடுத்து ஊற வைத்து விடுங்கள். இரவு தண்ணீரை வடித்து, ஒரு கட்டன் துணியில் போட்டு முடிந்து. ஒரு டப்பாவில் போட்டு மூடி வையுங்கள்.காலையில் திறந்துபார்த்தால் முளைத்திருக்கும். அதை எடுத்து மிக்சியில் சேர்ந்து மாவாக அரைத்து கொள்ளுங்கள். ஒரு பவுலில் மாவை போட்டு, நறுக்கிய வெங்காயம்- துருவிய கேரட்-1, சீரகம் 1 ஸ்பூன், மிளகாய்-1, கறிவேப்பிலை - 1கொத்து, மிளகு தூள் 1/2 ஸ்பூன்,உப்பு இஞ்சி-1 துண்டு நறுக்கியது. கொத்தமல்லி - 1 கைப்பிடி சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.தோசைக்கல்லில் எண்ணெய் தடவி குட்டி குட்டியாக சுட்டு எடுக்கலாம் தேங்காய் சடனி, பூண்டு சட்னியோடு சாப்பிட சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாரம் ஒரு முறை இதை சாப்பிடுங்க.
தேவையானபொருட்கள்-200 கிராம்அரிசி,100 கிராம்துவரம்பருப்பு,சிறிதளவு புளிகரைசல்,1வெங்காயம்,1 தக்காளி,1உருளைக்கிழங்கு,3கேரட் (சிறியது),1 கத்தரிக்காய்,அரை தேக்கரண்டிபெருங்காயம்,1 தேக்கரண்டிசாம்பார் பொடி, சிறிதளவுமஞ்சள் தூள், பீன்ஸ் (தேவையான அளவு)4 பூண்டு பல் ,கடுகு, உளுந்து. சீரகம் சிறிதளவு தாளிக்க ,சிறிதளவு கொத்தமல்லி செய்முறை - குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளித்து அதன் பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் காய்கறிகள் அனைத்தும் சேர்த்து, சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.பின் அதில் மேலே கூறிய அளவில் பெங்காயம், சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து அதனுடன் அரிசி, புளி கரைசல் மற்றும் துவரம் பருப்பு சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.அதில் சிறிதளவு நெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து குக்கரைமூடவும்.விசில் வந்தவுடன் குக்கரை இறக்கவும்.இப்போது பருப்பு கலவை சாதம் பரிமாற ரெடி.
தேவையான பொருட்கள்: கோதுமைமாவு - 1/4 கப், சர்க்கரை - 1/2 கப் ,தண்ணீர் - 1/2 கப் + ¼, கப், நெய் - 1/4 கப் + 2 டீஸ்பூன் ,ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை, பாதாம் - 4 (நறுக்கியது)செய்முறை:முதலில் ஒருவாணலியை அடுப்பில்வைத்து, அதில் 1/4 கப் நெய்ஊற்றி சூடானதும், அதில் கோதுமைமாவு சேர்த்துகட்டி சேராதவாறுதொடர்ந்து 20 நிமிடம்நன்கு கிளறிவிட வேண்டும். பின் அதில் 1/2 கப் + 1/4 கப் தண்ணீர்ஊற்றி நன்குவேகமாக கிளறிவிட வேண்டும். மாவானது வாணலியில்ஒட்டாமல் தனியாகவர ஆரம்பிக்கும்போது, சர்க்கரைசேர்த்து நன்குகிளறி விடவேண்டும்.சர்க்கரை நன்குஉருகி அல்வாநன்கு திரண்டுவர ஆரம்பிக்கும்போது, அதில்மீதமுள்ள நெய்ஊற்றி, ஏலக்காய்பொடி தூவிகிளறி, இறுதியில்பாதாமை தூவிஇறக்கினால், கோதுமைஅல்வா ரெடி!!
தேவையான பொருட்கள்: மைதா - 3/4 கப், கோதுமைமாவு - 1/4 கப், துருவியகேரட் - 1/2 கப் ,தயிர் - 3/4 கப், ஆலிவ்ஆயில் - 1/4 கப், பால் - 2 1/2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 1/2 கப் ,வென்னிலாஎசன்ஸ் - 1/2 டீஸ்பூன், ஏலக்காய்பொடி - 1/4 டீஸ்பூன் ,பேப்பிங்பவுடர் - 1/2 டீஸ்பூன்,பேக்கிங்சோடா - 1/2 டீஸ்பூன், உப்பு - 1/4 டீஸ்பூன், வால்நட்ஸ் - ஒரு கையளவுசெய்முறை:முதலில் மைதா, கோதுமை,பேக்கிங் பவுடர்மற்றும் பேக்கிங்சோடாவை ஒன்றாககலந்து, சல்லடைக்கொண்டு சலித்துக்கொள்ள வேண்டும். பின் ஒருபௌலில் தயிர், பால், சர்க்கரைமற்றும் ஆலிவ்ஆயில் சேர்த்துநன்கு சர்க்கரைகரையும் வரைகிளறி விடவேண்டும்பின்பு அதில்ஏலக்காய் பொடி,வெண்ணிலா எசன்ஸ்சேர்த்து நன்குகிளறி, பின்அதில் துருவியகேரட், சலித்துவைத்துள்ள மாவைசேர்த்து, வால்நட்ஸைபொடியாக வெட்டிப்போட்டு, கட்டிசேராதவாறு நன்குகிளறி விடவேண்டும். பின்னர்மைக்ரோ ஓவனை 182 டிகிரியில் 10 நிமிடம்சூடேற்ற வேண்டும். அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை சிறிதுதூவி, பின்அதில் கேக்கலவையை ஊற்றி, மைக்ரோ ஓவனில்வைத்து 20-25 நிமிடம் பேக்செய்ய வேண்டும்.அடுத்து கேக்நன்கு வெந்துவிட்டதாஎன்று டூத்பிக்கொண்டு குத்திப்பார்க்கும் போது,டூத்பிக்கில் மாவுஒட்டினால், மீண்டும்ஓவனில் வைத்து 5-10 நிமிடம் பேக்செய்து இறக்கவேண்டும். இறுதியில்ஓவனில் இருந்துஎடுத்த உடனேயேஒரு ஈரமானதுணியில் அதனை 15 நிமிடம் வைத்து, பின் அதனைஒரு தட்டில்குப்புற தட்டி, அதன் மேல்உள்ள பட்டர்பேப்பரை எடுத்து, 1 மணிநேரம் கழித்து, கத்தியால் துண்டுகளாக்கினால், எக்லெஸ்கேரட் கேக்ரெடி.
தேவையான பொருட்கள் : துருவிய பீட்ரூட் - 2 கப் கொதிக்கவைத்த பால் - 1 கப் சர்க்கரை - 1/2 கப் நெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன் ,ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன். பாதாம், முந்திரி - சிறிதுசெய்முறை:முதலில் ஒரு வாணலியில் 1 டேபிள் ஸ்பூன்நெய் ஊற்றிகாய்ந்ததும், துருவிவைத்துள்ள பீட்ரூட்டைசேர்த்து 3,5 நிமிடம் குறைவான தீயில்பச்சை வாசனைபோக வதக்கிவிட வேண்டும்.பின்னர் அதில்பால் சேர்த்து10 நிமிடம் குறைவானதீயில் மென்மையாகும்வரை வேகவைக்கவும். பின்பால் வற்றும்வரை அடுப்பில்வைத்து, பின்அதில் சர்க்கரைசேர்த்து நன்குகிளறி விடவேண்டும்.அப்படி கிளறிவிடும் போது,கலவை அடிப்பிடிக்கும் வகையில் வரும். அப்போதுகொஞ்சம் கொஞ்சமாகநெய் சேர்த்துகிளறி அல்வாபதத்திற்கு வரும்வரை கிளறிவிட வேண்டும். பின் ஏலக்காய்பொடி சேர்த்துகிளறவும்.அதே சமயம்மற்றொரு அடுப்பில், சிறு வாணலியைவைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய்ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும்பாதாம் சேர்த்துபொன்னிறமாக வறுத்து, அல்வாவில் சேர்த்துபிரட்டினால், சுவையானபீட்ரூட் அல்வாரெடி.
தேவையான பொருட்கள்: சோள மாவு - 1/2 கப், சர்க்கரை - 1 1/2 கப் ,தண்ணீர் - 1 கப் + 1 1/2 கப், நெய் - 2 டேபிள் ஸ்பூன், முந்திரி - 1/4 கப் (நறுக்கியது), ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை, கேசரி பவுடர் - 1 சிட்டிகை செய்முறை:முதலில் சோள மாவை ஒரு பௌலில் போட்டு, அத்துடன்1,1/2 கப் தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் சிறு வாணலியில் சிறிது நெய் ஊற்றி, அதில் முந்திரியை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு ஒரு நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில்1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, சர்க்கரையானது நன்கு கரைந்து, சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, அல்வா போன்று வர ஆரம்பிக்கும். அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா போன்று வரும் வரை கிளறி, பின் அதில் வறுத்த முந்திரியை சேர்த்து கிளறி இறக்கி, ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, அதனை துண்டுகளாக்கினால் சோளமாவு அல்வா ரெடி.