25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


கல்கி 2898 AD மற்றும் கங்குவா போன்ற பிரம்மாண்ட பான்-இந்தியப் படங்களையும் முறியடித்துள்ள.புஷ்பா 2  1000 கோடி வசூல்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கல்கி 2898 AD மற்றும் கங்குவா போன்ற பிரம்மாண்ட பான்-இந்தியப் படங்களையும் முறியடித்துள்ள.புஷ்பா 2  1000 கோடி வசூல்

புஷ்பா 2 படத்தின், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஏற்கனவே ரூ 1000 கோடியைத் தாண்டிவிட்டதாக வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒரு படம்100 கோடி வசூல் செய்தாலே அது வெற்றிப் படமாக கருதப்பட்டது. உள்நாட்டில்நிகர பாக்ஸ் ஆபிஸ் ரூ.100 கோடி வசூல் செய்தாலே அது100 கோடி கிளப்பில் இணைந்துவிடும். பெரிய நடிகர்களின் படங்கள் கூட அப்படி தான்.. ஆனால் இப்போது, பெரிய பட்ஜெட் படங்களின் வெற்றியின் உண்மையான அளவுகோல்1000 கோடி கிளப்பில் நுழைவதுதான்.புஷ்பா2 படத்தின், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஏற்கனவே ரூ1000 கோடியைத் தாண்டிவிட்டதாக வர்த்தக வட்டாரங்கள் கூறுகின்றன.ஆமீர் கானின் தங்கல் படம் உள்நாட்டில் ரூ.387 கோடி வசூல் செய்துள்ள நிலையில், உலகளவில் ரூ.2000 கோடி வசூலித்துள்ளது. பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டும் இந்தியாவில் சுமார் ரூ.500,600 கோடி வசூல் செய்தது., ஆனால் உலகளவில் ரூ.1000 கோடிக்கு மேல்.அந்த வகையில் சில சமயங்களில், ப்ரீரிலீஸ் பிசினஸில் மட்டும் இந்தத் தொகையை வசூலிக்கும் திரைப்படங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வர்த்தக நிபுணர்கள் வாதிடுகின்றனர். ஆனால் ரிலீஸுக்கு முன்பே ஒரு படம் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்துவிட்டது. ஆம். புஷ்பா 2 தான் அந்த படம்.

புஷ்பா2: தி ரூல் என்பது2024 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா படமாகும்.,2021ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் புஷ்பா: தி ரைஸ் படத்தின் இரண்டாம் பாகமான இப்படம்,500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது..ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு படத்தின் ப்ரீ ரிலீஸ் உரிமை கோரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புஷ்பா 1 வட இந்தியாவிலும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற படம் என்பதால், இந்தி பெல்ட்டில் விநியோக உரிமை கணிசமாக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுபுஷ்பா2 படத்தின், ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஏற்கனவே ரூ1000 கோடியைத் தாண்டிவிட்டது..புஷ்பா2 வெளிவர இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. புஷ்பாவின் மொத்த ப்ரீரிலீஸ் பிசினஸ், பதான், கதார்2 மற்றும் அனிமல் போன்ற பிளாக்பஸ்டர்களின் உலகளாவிய மொத்த வசூலை விட அதிகம் என்று கூறப்படுகிறது.

சுகுமார் இயக்கி உள்ள இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். மேலும். ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜகபதி பாபு, பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் சுதந்திர தினமான ஆகஸ்ட்15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News