25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Apr 29, 2024

மகிழ் 24 என்ற தலைப்பில் நடைபெற்ற கலை மற்றும் இலக்கிய விழா

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் (27.04.2024) மகிழ் 24 என்ற தலைப்பில் நடைபெற்ற கலை மற்றும் இலக்கிய விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

Apr 27, 2024

காரியாபட்டி சித்தனேந்தல் பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (பிரைஸ் டிரஸ்ட்)

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சித்தனேந்தல்  பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (பிரைஸ் டிரஸ்ட்) சார்பில் ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S, அவர்கள் முன்னிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மேனேஜிங் டிரஸ்டி திருமதி சினேக லதா பொன்னையா அவர்கள் வழங்கினார்.அதன்படி, காரியாபட்டி சித்தனேந்தல்  பால்ச்சாமி ராஜம்மாள் நினைவு அறக்கட்டளை (பிரைஸ் டிரஸ்ட்) சார்பில் முஷ்டகுறிச்சி, கோபாலபுரம், அழகாபுரி  மற்றும்  ஆவுடையாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.2 இலட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Apr 26, 2024

இந்தியாவின் பிற மாநிலங்களில் வாக்குரிமை உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்களிக்க செல்ல ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்

    2024 ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தல்  முதல்கட்டமாக 19.04.2024 அன்று தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பிற மாநிலங்களில் 26.04.2024, 07.05.2024, 13.05.2024, 20.05.2024, 25.05.2024 மற்றும் 01.06.2024 ஆகிய தேதிகளில் பல கட்டங்களாக மக்களவை மற்றும் சில மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும்  நடைபெறவுள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும்  வெளி மாநிலங்களில்  வாக்குரிமை உள்ள தினக்கூலி / தற்காலிக பணியாளர்கள் / ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து  பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களும் அந்தந்த மாநில தேர்தல் நாளில் அவரவர் சொந்த மாநிலத்திற்கு சென்று வாக்களிக்க ஏதுவாக  மக்கள்  பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 135பி-ன் கீழ் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும் என சம்;பந்தப்பட்ட அனைத்து தொழிற்சாலைகள் / கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.அவரவர் சொந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் நாளன்று வாக்களிக்க செல்லும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு அன்றைய தினத்திற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க தவறும் தொழிற்சாலைகள்  மற்றும்  கட்டுமான நிறுவனங்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.                தமிழ்நாட்டில் தங்கி பணியாற்றும் வெளி மாநிலங்களில் வாக்குரிமை பெற்ற தொழிலாளர்கள் மேற்படி தேர்தல் நாட்களில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்காத தொழிற்சாலைகள் ஃ  கட்டுமான நிறுவனங்கள் தொடர்பாக புகார் அளிக்க ஏதுவாக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான குறைகளை திரு.ஏ.வேல்முருகன் - 88257 11344, திரு.சு.இரவிக்குமார் - 94437 64310,  திருமதி பெ.சுசீலா - 98658 11166, திரு.பி.ராஜ்குமார் - 93447 45064, திருமதி இரா.தீபா  - 90036 45279 திரு.டி.எஸ்.சஜின் - 99947 21299 என்ற எண்களில் தொடர்;பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன்,  I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Apr 25, 2024

உலக மதியிறுக்க (ஆட்டிசம்) தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட மருத்துவக்கல்லூரியில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை மற்றும் மனநலத்துறை சார்பாக, உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு சிறப்பு குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,  I A S,அவர்கள்  (24.04.2024)  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.ஆட்டிசம்  என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும், எந்த முறையில் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.உலகம் முழுவதும் மதியிறுக்க நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுமார்  1.5 சதவீதம் பேர் உள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிவியல் வளர்ச்சி மற்றும் அரசின் திட்டங்கள் நிறைய இருக்கின்றன. தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கையில்  ஆட்டிசம் குறைபாடு உடைய செயல்களை ஆய்வு செய்வதற்காகவும், புதிய மையங்கள் திறப்பதற்காகவும்சுமார் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளும் நடைபெறுகிறது.அரசினுடைய திட்டங்கள் மட்டும் இல்லாமல் இது தொடர்பான அறிவியல் செய்திகள் எல்லோருக்கும் செல்லக்கூடிய அளவிற்கு நிறைய விழிப்புணர்வுகள் ஏற்படுத்துவது மிகவும் முக்கியம்.குழந்தை பிறந்து இரண்டு அல்லது மூன்று வயதில் அதற்கான அறிகுறிகள் தென்பட்டால்          அதனை நம்பிக்கைகள் சார்ந்து மட்டுமே அதனை அணுகுவது என்பது கூடாது. இந்த மதியிறுக்க  குறைபாட்டிற்கு நவீன மருத்துவத்தில் வந்திருக்கக்கூடிய பல்வேறு வசதிகளை ஏழை எளிய மக்களும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.ஆட்டிசம் குழந்தைகளின் அறிகுறிகள் சீக்கிரமாக கண்டறியப்பட்டு, மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் பதிவு செய்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை கொடுப்பதன் மூலம் அறிவுத்திறனில் முன்னேற்றம் காணமுடியும்.மேலும், அந்தந்த கிராமங்களில் இருக்கக்கூடிய குழந்தைகளை ஆரம்பக்கட்டத்தில் பார்க்கக்கூடிய அரசு பணியாளர்களான செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மதியிறுக்கதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இதுபோன்ற நிறைய பயிற்சிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதன் மூலமாக ஆட்டிசம் குறைபாடு, மனநல மருத்துவம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தேவையான அறிவியல் பயன்களை ஏழை எளிய மக்களுக்கும் எடுத்துச் செல்வது மிகவும் தேவையாக இருக்கிறது. எனவே மருத்துவ கல்லூரிகளும், அரசு மருத்துவமனைகளும் பொதுமக்களிடையே இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஆத்திச்சூடி ஒப்புவித்தல், யோகா, சிலம்பாட்டம் மற்றும் நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளில் இக்குழந்தைகள் பங்கேற்றனர். மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிலும், 2-ம் ஆண்டு செவிலியர் மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. பின்னர் மதியிறுக்கம் (ஆட்டிசம்) குறைபாடு கொண்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு சிகிச்சை முறைகள், அறிகுறிகளை சீக்கிரமாக கண்டறியப்பட்டு மாவட்ட தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத்தில் பதிவு செய்து அவர்களுக்கு தகுந்த சிகிச்சை கொடுப்பதன் மூலம் அறிவு திறனில் முன்னேற்றம் அடையச்செய்தல், அக்குழந்தைகளை கையாளுதல் உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.சீதாலட்சுமி, குழந்தைகள் நலத்துறைத் துறைத்தலைவர் பேராசிரியர் மரு.வெங்கட்ராமன், மருத்துவக் கல்லூரி மனநலத்துறை பேராசிரியர் மரு.ராஜசேகரன் மற்றும் ஆட்டிசம் குறைபாடுடைய  குழந்தைகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Apr 24, 2024

2023-2024 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்கள் 100 சதவிகிதம் உயர்கல்வியில் சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (23.04.2024) 2023-2024 ஆம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்கள் 100 சதவிகிதம் உயர்கல்வியில் சேர்வதற்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் அனைத்து மாணவர்களையும் உயர்கல்வி சேர்ப்பதற்கும், இப்பணியில் வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், ஒவ்வொரு மாணவனுக்கும் உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.ஒரு ஆசிரிய பயிற்றுநருக்கு இரண்டு பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்படும். வட்டார வள மைய ஆசிரிய பயிற்றுனர்கள் அப்பள்ளிகளில் உள்ள உயர்கல்வி ஆலோசனைகள் தேவைப்படும் மாணவர்கள் விவரங்களை தொகுத்தல், ஆலோசனைகள் வழங்குதல், அனைவரும் உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வரை தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு, உயர்கல்வியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும்  புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் சிறந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை கண்டறிந்து, உயர்கல்வி சார்ந்து, வழங்கப்பட உள்ள பயிற்சி வகுப்புகளில் மாணவர்களை சேர்த்து, படிக்க வைப்பது குறித்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.உயர்கல்வி சேர்க்கை விகிதாச்சாரத்தினை நடப்புக்கல்வியாண்டில் அதிகப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்டம் முழுமைக்கும் உள்ள 90 ஆசிரிய பயிற்றுனர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Apr 22, 2024

வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்றத் தொகுதிக்குப்பட்ட பாதுகாப்பு வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கும் பணி

மக்களவைத் தேர்தல்-2024 34- விருதுநகர் மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைந்துள்ள 1,689 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு 19.04.2019 அன்று முடிவுற்று, வாக்குப்பதிவு அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் விருதுநகர்-அருப்புக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் 4 அடுக்கு பாதுகாப்புகளுடன், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்ததாவது:- நடைபெற்ற மக்களவைத் தேர்தல்-2024 34.விருதுநகர் பாராளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட 1,689 வாக்குச்சாவடி மையங்களிலிருந்து வாக்குப்பதிவுடன் கூடிய மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு வரப்பட்டு, விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, வாக்கு எண்ணிக்கை மையங்களில், விருதுநகர் மக்களவைத் தொகுதி தேர்தல் பொதுபார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா,I A S., அவர்கள் தலைமையில் மற்றும் அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் என 545 பணியாளர்களுடன் 4 அடுக்குப் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை சிசிடிவி உடன் இணைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டி வாயிலாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் 24 மணிநேரமும் கண்காணித்து கொள்ளலாம்.மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க உயர் நிலையான அலுவலர்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 20, 2024

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார்

விருதுநகர் மாவட்டத்தில், மக்களவைத் தேர்தல்- 2024 முன்னிட்டு, விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,  (19.04.2024) மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் 2024- க்கான வாக்குபதிவு இன்று  காலை 7.00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்களார்கள் வாக்களித்து கொண்டிருக்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர்கள் வாக்குபதிவினை செய்ய ஏதுவாக பல்வேறு விரிவான ஏற்பாடுகளும் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும், குடிநீர், நிழல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாவட்டம் முழுவதும் மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல்துறை உதவியுடன் விரிவான பாதுகாப்பு  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 7:00 மணி முதல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெற்ற வருகிறது.மேலும், வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துக்கூறும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.இந்த தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியிலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள், மூத்தவாக்காளர்கள், திருநங்கை, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் தவறாமல் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டுமென மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Apr 20, 2024

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்குபதிவுகளை ஆய்வு

மக்களைவத் தேர்தல் -2024 யை முன்னிட்டு  (19.04.2024) விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும் வாக்குபதிவுகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 195- திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் 304 வாக்குபதிவு மையங்களிலும், 196- திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 311 வாக்குபதிவு மையங்களிலும், 204- சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 286 வாக்குபதிவு மையங்களிலும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 277 வாக்குபதிவு மையங்களிலும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 256 வாக்குபதிவு மையங்களிலும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 255 வாக்குபதிவு மையங்களிலும்,  என மொத்தம் 1860 வாக்குசாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.விருதுநகர் மக்களவைத் தொகுதியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 1680 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 188 பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு உள்ளன.மேலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும், அதிக பெண் வாக்காளர்கள் உள்ள பகுதிகளில், பெண்களுக்கென்று தனித்துவமாக தலா 1 வாக்குச்சாவடி மையம் என மொத்தம் 7 பிங்க் நிற வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் முழுவதும் பெண் வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு வாக்குபதிவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி, விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள சத்திரிய மகளிர் நடுநிலைப் பள்ளி, வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரி,  திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கள்ளிக்குடி மேலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சிவரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி, திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் உள்ள திருநகர் சி.எஸ்.இராமாச்சாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருநகர் முத்துத்தேவர் முக்குளத்தோர் மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களையும்,சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடியான படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தினையும், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெங்கடாசலபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பெண்களால் நடத்தப்பட்டு வரும்  வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்றுவரும் வாக்குபதிவினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Apr 20, 2024

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையமான நடையனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை ஆய்வு

மக்களவைத் தேர்தல் 2024 முன்னிட்டு  (19.4.2024 )விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகாசி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையமான நடையனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Apr 18, 2024

வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (17.04.2024) மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.நீலம் நம்தேவ் எக்கா, I A S., அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 1895 வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவை என கண்டறியப்பட்ட 148 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவினை நேரடியாக கண்காணிக்கும் வகையில் 148 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.202- இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 15 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 203- திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 7 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 204-சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 20 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 205- சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 30 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 206- விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 16 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 207- அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 22 தேர்தல் நுண்பார்வையாளர்களும், 208- திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 38 தேர்தல் நுண்பார்வையாளர்களும் என மொத்தம் 148 தேர்தல் நுண்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.நுண்பார்வையாளர்களாக வங்கிகளில் பணியாற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நுண்பார்வையாளர்கள் தேர்தல் நாளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள் உள்ளிட்ட பணிகள் குறித்தும், வாக்குச்சாவடிகளில் என்னென்ன பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்களால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.தேர்தல் நுண்பார்வையாளர்கள் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, வாக்குப்பதிவு அலுவலர்களால் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிந்து, அவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து கண்காணித்து தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டும்.குறிப்பாக, வாக்குப்பதிவு நாளில் நுண்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நல்ல முறையில் எந்தவொரு சந்தேகமுமின்றி மேற்கொள்ளும் வகையில் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குரிய பணிகளை நேர்த்தியாகவும், சிறப்பாக செய்ய வேண்டும். நுண்பார்வையாளர்கள் பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை முறையாக கண்காணித்து சம்மந்தப்பட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பொதுப்பார்வையாளர் அவர்கள் தெரிவித்தார்.இப்பயிற்சி வகுப்பில் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி கையேடு மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில்  மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாண்டிச்செல்வம், வங்கி பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

1 2 ... 57 58 59 60 61 62 63 ... 69 70

AD's



More News