25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில்  (21.06.2024) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது.
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் திரு.ஜெயராமன் த/பெ.மூர்த்தி, இராஜபாளையம் பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் இனத்தின்கீழ் ரூ.100000/-  ஒரு இலட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.  மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தென்னங்கன்றுகள் ஒரு  விவசாயிக்கு வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொடுக்காபுளி கன்றுகள் ஒரு  விவசாயிக்கு வழங்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பழ மர கன்றுகள் அடங்கிய தொகுப்பு இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காய்கறி விதைகள் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மின்சாரத்தினால் இயங்கும் புல் வெட்டும் கருவி 50 சதவீத மானியத்தில் இரண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
கண்மாய்கள் மற்றும் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அப்பகுதிக்குரிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வட்டாட்சியர் இணைந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சீமைக் கருவேல மரங்களை அரசு ஆணையின்படி அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  சீமை கருவேல மரங்களை அகற்றினால் மட்டுமே வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்தினை தடுக்க முடியும் என தெரிவித்தார்.வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் இ- வாடகை திட்டத்தின் கீழ் விவசாய கருவிகளான உழுகை இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம், களைகருவிகள் உள்ளிட்ட அனைத்து இயந்திரங்களும் முன் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தங்கு தடையின்றி கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.வன விலங்குகளால் பயிர்சேதம் ஏற்படும் பட்சத்தில் வனத்துறையினர் முன்னுரிமை அடிப்படையில் கள ஆய்வு செய்து இழப்பீடு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News