25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இந்திய விமானப்படை ஆள்சேர்ப்பில் அக்னிவீர் வாயு வேலைவாய்ப்புத் தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய விமானப்படை ஆள்சேர்ப்பில் அக்னிவீர் வாயு வேலைவாய்ப்புத் தேர்விற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

இந்திய விமானப் படை ஆள்சேர்ப்பில் அக்னிவீர்வாயுத் தேர்வு பற்றிய  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு 08.07.2024  முதல் 28.07.2024 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வுக்கு  03.07.2004 முதல் 03.01.2008 வயது வரையுள்ள திருமணமாகாத விண்ணப்பதாரர்கள்   விண்ணப்பிக்கலாம்.  இத்தேர்வுக்கு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் தேர்ச்சி  அல்லது மூன்று வருடம் டிப்ளோ என்ஜீனியரிங் துறையில் 50 சதவீதம் தேர்ச்சி அல்லது 2 வருடம் கணிதம் மற்றும் இயற்பியல் தொடர்பான தொழில்துறையில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வுக்கு உடல்தகுதி ஆண்களுக்கு 152.5 செ.மீ , பெண்களுக்கு 152 செ.மீ வும் உடலுக்கேற்ற எடை இருத்தல் அவசியம். இந்த பணியிடத்திற்கு மேற்கண்ட தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வினில் முதல் தகுதிச்சுற்று ஆன்லைனில் கொள்குறித்தேர்வாகவும் இரண்டாம் தகுதிச்சுற்று உடற்தகுதித் தேர்வாகவும் நடைபெறும்.

இத்தேர்வுக்கு சம்பளமாக  முதல்  வருடம் 30,000 லிருந்து நான்காம் வருடம் 40,000 வரை வழங்கப்படுகிறது.மேற்கண்ட தேர்வுக்கு  விண்ணப்பிக்க  ரூ.550 (ஜி.எஸ்.டி உட்பட) ஆன்லைனில் செலுத்த வேண்டும். இதில்  தகுதியுள்ள பெண்கள் / ஆண்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News