மசாலா சுண்டல்
தேவையான பொருட்கள் -
150கிராம் வெள்ளை கண்டல்
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
1 பெரிய வெங்காயம் கட் செய்தது
2 பச்சை மிளகாய் கட் செய்தது
1/2 டீஸ்பூன் மிளகாய்தூள்
1/2 டீஸ்பூன் கறிமசால் தூள்
1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
4டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
சிறிதளவு கறிவேப்பிலை கொத்தமல்லித்தழை
3டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
செய்முறை- சுண்டலை குறைந்தது8மணி நேரம் ஊற வைக்கவும். பின் குக்கரில் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, பின் உப்பு சேர்த்து வேக வைத்து வடிகட்டி வைக்கவும்(5விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்)ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், வெங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு,தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன் உப்பு, கறிமசால் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வேக வைத்த சுண்டலை சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, காரம் சேர்ந்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும். சுவையான மசாலா சுண்டல் ரெடி.
0
Leave a Reply