25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


விளையாட்டு (SPORTS)

Jul 05, 2025

டென்னிஸ் ,& பளு தூக்குதல் .

டென்னிஸ் திருச்சியில் தேசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் பெண்கள் இரட்டையர் இறுதிப் போட்டி நேற்று நடந்தது.சென்னையின் தீப்தி வெங்கடேஷ், தனு ஸ்ரீ சதீஸ் ஜோடி, மேற்கு வங்காளத்தின் ரியா ராய், ' எந்திரக்ஷி பட்டாச்சார்யா ஜோடியை எதிர் கொண்டது. இதில் தமிழக ஜோடி, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் கோவர்தன் சுரேஷ், ஹர்ஷல் நிதன் ஜோடி, கர்நாடகாவின் இஷான் பதாகி, அர்ஜுன் சூரி ஜோடியிடம் 6-2, 4-6, 7-10 என்ற செட் கணக்கில்  வீழ்ந்தது.  பளு தூக்குதல் ., ஆசிய யூத், ஜூனியர் பளுதுாக்குதல் கஜகஸ்தானில்,  சாம்பியன் ஷிப் யூத் பெண்களுக்கான 44 கிலோ பிரிவில் , இந்தியாவின் புங்னிதாரா ,'ஸ்னாட்ச்' பிரிவில் 60, 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 81 என, மொத்தம் 141 கி.கி., பளுதுாக்கிய புங்னிதாரா, 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் அதிக பட்சமாக 81 கி.கி., பளு துாக்கிய அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த புங்னிதாரா 17, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.  

Jul 04, 2025

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி முதல் இன்னிங்சில் 887 ரன் குவித்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்('ஆண்டர்சன் சச்சின் டிராபி') பங்கேற்கிறது.முதல் டெஸ்டில் இங்கிலாந்து வென்றது. இரண்டாவது டெஸ்ட் பர்மிங்ஹாமில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 310/5 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (114), ஜடேஜா (41) அவுட்டாகாமல் இருந்தனர்.நேற்று,2ம் நாள் ஆட்டம் நடந்தது. வோக்ஸ் வீசிய ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஜடேஜா. டெஸ்ட் அரங்கில் தனது 23வது அரைசதத்தை பதிவு செய்த ஜடேஜா, ஸ்டோக்ஸ் வீசிய 92வது ஓவரில் வரிசையாக2 பவுண்டரி அடித்தார். பஷிர் வீசிய 107வது ஓவரில் ஜடேஜா, கில் தலாஒரு சிக்சர் விளாச,13 ரன் கிடைத்தது. ஆறாவது விக்கெட்டுக்கு203 ரன் சேர்த்த போது ஜோஷ் டங் வீசிய 'பவுன்சரில்' ஜடேஜா (89) ஆட்டமிழந்தார்.ஏழாவது விக்கெட்டுக்கு144 ரன் சேர்த்த போது ஜோ ரூட்'சுழலில்' வாஷிங்டன் சுந்தர்(42) போல்டானார். அபாரமாக ஆடிய சுப்மன் கில் (269 ரன்,387 பந்து , 3x6, 30x4), ஜோஷ் டங் 'வேகத்தில்வெளியேறினார்.ஆறாவது விக்கெட்டுக்கு சுப்மன், ஜடேஜா ஜோடி 203 ரன் சேர்த்தது. இங்கிலாந்து மண்ணில் பேட்டிங் வரிசையில்6வது அல்லது அதற்கு கீழான இடத்தில் களமிறங்கி அதிக ரன் சேர்த்த 3வது இந்திய ஜோடியானது. கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார்., இந்திய அணி முதல் இன்னிங்சில் 887 ரன் குவித்தது.இளம் இந்திய அணி வெற்றி  19 வயதுக் குட்பட்ட இந்திய அணி,இங்கிலாந்து சென்று,5 போட்டி கொண்ட யூத் ஒருநாள் தொடரில் பங்கேற்க,முதல் இரு போட்டி முடிவில் தொடர் 1-1 என இருந்தது.மூன்றாவது போட்டி நார்தாம்ப்டனில் நடந்தது.மழை காரண மாக போட்டி தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இங்கிலாந்து அணிக்கு டாகின்ஸ் (62),இசாக் (41) ஜோடி நல்ல துவக்கம் தந்தது. மேயஸ் (31), ஆல்பர்ட் (21) உதவி னர். கேப்டன் தாமஸ் ரியு (76) அவுட்டாகாமல் இருந்தார்.இங்கிலாந்து அணி40 ஓவரில்268/6 ரன்எடுத்தது. இந்தியா சார்பில் கனிஷ்க்3 விக்கெட் சாய்த்தார்.இந்திய அணிக்கு வைபவ் சூர்யவன்ஷி,கேப்டன் அபிக்யான் (12) ஜோடி துவக்கம் தந்தது.சிக்சர் மழை பொழிந்த வைபவ், 20 பந்தில் அரைசதம் கடந்தார். இவர் 31 பந்தில்86 ரன்(9:6,6×4) எடுத்து அவுட்டானார். இந்திய அணி34.3 ஓவரில்274/6 ரன் எடுத்து,4 விக்கெட் டில் வெற்றி பெற்றது. தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது.யூத் ஒருநாள் அரங்கில் (19 வயது ) ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என வைபவ் (9) சாதனை படைத்தார். 

Jul 04, 2025

கிராண்ட் செஸ் மூன்றாவது தொடரில் குகேஷ் பிரக்ஞானந்தாவை வென்றார் .

 10வது சீசன் (மொத்தம் 3 தொடர்). கிராண்ட் செஸ் தொடரின் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது.உலக சாம்பியன், இந்தியாவின்குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது.முதல் நாளில் 3 சுற்று நடந்தன. முதல் சுற்றில் குகேஷ், போலந்தின் ஜான்டுடாவிடம் தோல்வியடைந்தார். குகேஷ், அடுத்த சுற்றில் பிரான்சின் அலிரே சாவை வென்றார். 3வது சுற்றில் குகேஷ் - பிரக்ஞானந்தா மோதினார்.குகேஷ், 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.முதல் 3 சுற்று முடிவில் கார்ல்சன் (4.0), ஜான் டுடா (4.0), அமெரிக்காவின் வெஸ்லே (4.0), குகேஷ் (4.0) 'டாப் -4' இடங்களில் உள்ளனர். முதல் இரு சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா (2.0) கடைசி இடத்தில் (10) உள்ளார்.ஜூனியர் செஸ்: இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம்7 பதக்கம் கைப்பற்றியது. இந்தியா அபாரம்ஜார்ஜியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக் கான உலக கோப்பை ஜூனியர் ,சர்வதேச செஸ் கூட்ட மைப்பு ('பிடே') சார்பில் ('கேடட்') தொடர் நடந்தது.  10 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓபன் பிரிவில் பைனலில் இந்தியாவின் சர்பர்தோ மானி தங்கப்பதக்கம் வென்றார்.பெண்கள்பிரிவு.(10 வயது) பைனலில் இந்தியாவின் திவி பிஜேஷ், சீனாவின் ஜிஹான் செனை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். வெண்கலப் பதக்கத்துக் கான போட்டியில் இந்தியாவின் ஷர்வானிகா (தமிழகம்), ரஷ்யாவின் வோல்கோவாவை வென்றார். 

Jul 03, 2025

தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .JULY 2 ND

தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி .JULY 2 NDடி. என் பி.எல்., 'டி-20' தொடரின் 9வது சீசன் தமிழக கிரிக்கெட் சங் கத்தின் சார்பில் நடக்கிறது. தகுதிச்சுற்று 1ல் வெற்றி பெற்ற திருப்பூர் அணி பைனலுக்கு முன்னேறியது. நேற்று, திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் திண்டுக்கல், திருச்சி அணிகள் மோதின. திருச்சி அணி, 20 ஓவரில் 140/9 ரன் எடுத்தது, திண்டுக்கல் அணி 16.4 ஓவரில் 143/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாளை நடக்கும் தகுதிச்சுற்று 2ல் சேப்பாக்கம் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் இங்கிலாந்து,இந்திய அணி 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து வென்றது. நேற்று, 2வது டெஸ்ட் பர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் துவங்கியது.  இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (‘ஆண்டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்கிறது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ், 'பவுலிங்' தேர்வு செய்தார். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 310 ரன் எடுத்திருந்தது. சுப்மன் கில் (114), ஜடேஜா (41) அவுட்டாகாமல் இருந்தனர். 

Jul 03, 2025

விளையாட்டு போட்டிகள்.JULY 2ND

கால்பந்து 2026,மார்ச் 1/26ல் ஆஸ்திரேலியாவில்(12 அணிகள்) நடக்கவுள்ளபெண்களுக்கான ஆசிய கோப்பை கால் பந்து தொடரின். நடப்பு சாம்பியன் சீனா, தென்கொரியா,ஜப்பான், ஆஸ்திரேலியா என4 அணிகள் நேரடியாக பங்கேற்கின்றன. மீதமுள்ள 8 அணிகளை தேர்வு செய்ய, தகுதிச்சுற்று நடக்கிறது. 34 அணிகள், 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் அணி, ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறும்.தாய்லாந்து, மங்கோலியா, ஈராக், திமோர்-லெஸ்தே அணிகளுடன் இந்திய அணி'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. முதல் இரு போட்டியில் மங்கோலியா(13,0), திமோர்லெஸ்தே(4,0) அணிகளை வென்ற இந்தியா, நேற்று மூன்றாவது போட்டியில் இராக்கை எதிர்கொண்டது. இந்திய அணி 5,0என்ற கோல் கணக்கில் இந்தியாவெற்றி பெற்றது. 3 போட்டியில் 9புள்ளியுடன் முதலிடத்தில் பட்டியலில் உள்ளது. ஜூலை 5ல் நடக்கவுள்ள கடைசி போட்டியில் தாய்லாந்தை(6) வென்றால்,22 ஆண்டுக்குப்பின் ஆசியகோப்பை தொடருக்கு தகுதி பெறலாம்.   வில்வித்தை,  ஆசிய 'பேர் பவ்' வில்வித்தை சாம்பியன் ஷிப்தாய்லாந்தின் பாங்காக்கில் இன்று துவங்கி. ஜூலை6 வரைநடக்கவுள்ளது. இத்தொடரில் ஜப்பான், இந்தியா, மலேசியா, சீனா உட்பட 13 நாடுகளை சேர்ந்த 407 பேர் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில்,சென்னையில் இருந்து தாய்லாந்துக்கு, சேலம், விநாயகா மிஷன் கல்லூரி மாணவர் சஞ்சய் உட்பட 7 பேர் கலந்து கொள்கின்றனர். துப்பாக்கி சுடுதல், டேராடூனில் நடந்ததுப்பாக்கி சுடுதல் தேசிய தகுதி போட்டியில் சிறப்பாக செயல்பட்ட அஞ்சும், சவுரப் சவுத்தரி, மெகுலி கோஷ் ஆகியோர் மீண்டும்  தேர்வாகி இந்தியாவுக்காக விளையாட உள்ள னர். பாட்மின்டன் இந்தியாவின் ஸ்ரீகாந்த்  கனடா ஓபன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில்18-21, 21-19, 21-14 என்ற கணக்கில் சகவீரர் பிரியான்ஷு ரஜாவத்தை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். 

Jul 02, 2025

டேபிள் டென்னிஸ் 1989முதல் நடத்தப்படும் ஆசிய"யூத்"பெண்கள் பிரிவில் கோப்பை வென்ற முதல் இந்தியர் என சாதித்தார் திவ்யான்ஷி .

ஆசிய 'யூத்'டேபிள் டென்னிஸ்சாம்பியன்ஷிப்29வதுசீசன்உஸ்பெகிஸ்தானில். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் அரையிறுதியில் 14 வயது, இந்தியாவின் திவ்யான்ஷி, சீனாவின் ஜிலிங்லியுவை சந்தித்தார். முதல் 6செட்டுகளை இருவரும் மாறிமாறி கைப்பற்ற, 3–3 என ஆனது. 7வது, கடைசி செட்டை திவ்யான்ஷி 11-9 என வென்றார். திவ்யான்ஷி 4-3 என (10-12, 11-9, 11-6, 10-12, 11-9, 5-11, 11-9) பெற்றார்.இவர் 4,2 என்ற கணக்கில் 8,11/(13,11,/12,10,/11,8/,9,11, /11,8) வெற்றி பெற்றார். காலிறுதி, அரையிறுதி, பைனல் எனதொடர்ந்து மூன்று போட்டியில் சீன வீராங்கனைகளை சாய்த்த திவ்யான்ஷி, சாம்பியன் ஆனார். பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சின்ட்ரல்லா, ஹாசினி ஜோடி13 எனஜப்பானின் சாச்சி, மாவோ ஜோடியிடம் தோற்றது.ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் அன்குர், அபிநந்த் ஜோடி3-2 எனமலேசிய ஜோடியிடம் (ருய்ஜெ, ஏ சிம்) தோற்றது.

Jul 02, 2025

பர்மிங்ஹாமில் எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து, இரண்டாவது கிரிக்கெட்  டெஸ்ட் இன்று துவங்குகிறது.

  பர்மிங்ஹாமில்  எட்ஜ் பாஸ்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து, இரண்டாவது கிரிக்கெட்  டெஸ்ட் இன்று துவங்குகிறது.  பர்மிங்ஹாம், எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்தியாஇங்கிலாந்து 8டெஸ்டில் மோதின. இந்தியா 7ல்தோல்வி. ஒரு போட்டி 'டிரா' ஆனது.எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம்எளிதாக ரன் எடுக்க, பேட்டர்களின் சொர்க்க பூமி. துவக்கத்தில் 'வேகம்,3வதுநாளில் இருந்து சுழற் பந்துவீச்சு எடுபடும்.பர்மிங்ஹாமில் முதல் 3 நாள் வெப்பமான வானிலை காணப்படும். கடைசி 2 நாளில் மழைக்கு வாய்ப்பு உண்டு. தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி டி.என். பி.எல்.,'டி-20' தொடரின் 9வது சீசன் தமிழக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில், திண்டுக்கல் நத்தம் என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் நடந்த நேற்று ‘தகுதிச்சுற்று 1'ல் சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்'வென்ற சேப்பாக்கம் அணிபீல்டிங் தேர்வு செய்தது.திருப்பூர் அணி 20ஓவரில் 202/5 ரன் எடுத்தது. சேப்பாக்கம் அணி 16.1 ஓவரில் 123 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோற்றது. இந்த போட்டியில், திருப்பூர் அணி பைனலுக்கு, முன்னேறியது. 

Jul 01, 2025

இந்தியாவுக்கு டேபிள் டென்னிசில் 3 பதக்கம்.

ஆசிய 'யூத்' டேபிள் டென்னிஸ் சாம்பியன் ஷிப் 29வது சீசன் உஸ்பெகிஸ்தானில்,  15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அணிகளுக்கான பைனலில் இந்தியா, சீனா மோதின. சாஹில் ரவாத், ரித்விக் குப்தா, ஆதித்யா தாஸ் அடங்கிய இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஆசிய யூத் தொடரில் முதன்முறையாக வெள்ளி வென்று வரலாறு படைத்தது இந்தியா.19 வயதுக்குட்பட்ட ஆண்கள் அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியா, தென் கொரியா அணிகள் மோதின. அபினந்த் பிரதிவதி, அங்கூர் பட்டா சார்ஜீ, பிரியானுஜ் பட்டா சார்யா அடங்கிய இந்திய அணி 2-3 என போராடி தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றியது.  19 வயதுக்குட்பட்ட கலப்பு இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அங்கூர் பட்டா சார்ஜீ, தனீஷா ஜோடி 2-3 என தென்கொரியாவின் கிம் கயோன், பார்க் கஹியோன் ஜோடியிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.இது வரை இந்தியாவுக்கு ஒரு வெள்ளி, 2 வெண்கலம் என 3 பதக்கம் கிடைத்துள்ளது.

Jul 01, 2025

யு.எஸ்., ஓபன் 'சூப்பர் 300’ பாட்மின்டன் .

யு.எஸ்., ஓபன் 'சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர்  நியூயார்க்கில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, கனடாவின் பிரையன் யங் மோதினர். மொத்தம் 47 நிமிடம் நீடித்த போட்டியில் ஆயுஷ் 21-18, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக 'வேர்ல்டு டூர்' பட்டம் வென்றார். 20,யு.எஸ்., ஓபன் ஒற்றையரில் பட்டம் வென்ற ,இந்திய வீரரானா கர்நாடகாவை சேர்ந்த ஆயுஷ் 2வது இந்திய வீரரானார். நடப்பு சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் இந்தியரானார் ஆயுஷ்.பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் தான்வி சர்மா 16, அமெரிக்காவின் பெய் வென் ஜாங் 34, மோதினர்.முதல் செட்டை 11-21 என இழந்த தான்வி, 2வது செட்டை 21-16 எனக் கைப்பற்றினார்.   வெற்றியாளரை நிர்ண யிக்கும் 3வது செட்டில் தான்வி, 10-21,. முடிவில் தான்வி 11-21, 21-16, 10-21 என்ற கணக்கில் -தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.

Jul 01, 2025

விளையாட்டு போட்டிகள். 30TH JUNE

 கிரிக்கெட்  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஆண் டர்சன்-சச்சின் டிராபி) பங்கேற்ற  இங்கிலாந்து சென்று உள்ள இந்திய அணி லீட்சில் நடந்த முதல் டெஸ்டில் தோல்வியடைந்தது.பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்  இரண்டாவது டெஸ்ட் நாளை துவங்குகிறது. இங்கு இந்தியா பங்கேற்ற 8 டெஸ்டில் 7ல் இங்கிலாந்திடம் தோற்றது. ஒரு போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்' அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. கோல்ப்இந்திய வீராங்கனைகளான வாணி கபூர் 6வது, திக்ஷா தாகர் 8வது இடம்,ஜெர்மன் மாஸ்டர்ஸ் தொடரில் பிடித்தனர். சிங்கப்பூரின் ஷானன் டான் சாம்பியன் பட்டம் வென்றார். துப்பாக்கி சுடுதல் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு பைனலில் ,டேராடூனில் நடந்த தேசிய தகுதி போட்டிக்கான சுபாஷ் சிஹாக்கை (245.3 புள்ளி) வீழ்த்திய சவுரப் சவுத்ரி (245.7) முதலிடம் பிடித்தார்.

1 2 ... 115 116 117 118 119 120 121 ... 158 159

AD's



More News