கிரிக்கெட் உலக டெஸ்ட்சாம்பியன் ஷிப் (2025-27) நான்காவது சீசன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக இங்கி லாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ('ஆண்டர்சன்-சச்சின்' டிராபி) பங்கேற் கிறது. முதல் டெஸ்ட் நேற்று லீட்சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் துவங்கியது.'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ், பீல்டிங் தேர்வு செய்தார். ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர் களுக்கு இந்தியா, இங்கிலாந்து அணியினர் மவுன அஞ்சலி செலுத்தினர். கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். இங்கிலாந்து மண்ணில் களமிறங்கிய அறிமுக டெஸ்ட் இன்னிங்சில் சதம் விளாசிய 5வது இந்திய வீரரானார் ஜெய்ஸ்வால். இதற்கு முன் விஜய் மஞ்ச் ரேக்கர் (1952,133 ரன், லீட்ஸ்), சந்தீப் பாட்டீல் (1982, 129* ரன் மான்செஸ்டர்), சவுரவ் கங்குலி (1996, 131 ரன், லார்ட்ஸ்), முரளி விஜய் (2014, 146 ரன், நாட்டிங்காம்) இப்படி சாதித்திருந்தனர். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட் டுக்கு 359 ரன் எடுத்து இருந்தது. சுப்மன் (127), ரிஷாப் பன்ட் (65) அவுட் டாகாமல் இருந்தனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக 'பாரா' தடகள சாம்பியன்ஷிப் வரும் செப். 26-அக் 5ல் டில்லி, நேரு மைதானத்தில் நடக்க உள்ளது. இதற்கான 100 நாள் 'கவுன்ட்-டவுண்' நேற்று துவங்கியது.டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் லோகா, சின்னம் அறிமுகம் செய் யப்பட்டன. இந்தியாவின் பாரம்பரியத்தை போற் றும்வகையில், 'கார்ட்டூன்' வடிவ குட்டி யானை 'விராஜ்' சின்னமாக அறிவிக்கப்பட்டது.இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவரும் பாராலிம்பிக்கில் 2 தங்கம் (ஈட்டி எறிதல்) வென்ற வீரருமான தேவேந்திர ஜஜாரியா கூறுகையில், "இந்தியாவில் முதல் முறையாக உலக பாரா தடகள சாம்பியன் ஷிப் நடக்க இருப்பது பெருமையான விஷயம் என்று இந்திய பாராலிம்பிக் கமிட்டியின் தலைவரும் பாராலிம்பிக்கில் 2 தங்கம் (ஈட்டி எறிதல்) வென்ற வீரருமான தேவேந்திர ஜஜாரியா என்றார். 100 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 186 பதக்கங்கள் வழங்கப்படும்.இப்போட்டிகளை சிறப்பாக நடத்துவோம். இதன் மூலம் 2036 ல் ஒலிம்பிக், பாராலிம் பிக்கை நடத்த இந்தியா தயாராக இருக்கிறது என்பதை உலகிற்கு உணர்த்து வோம்," என்றார்.தன்னம்பிக்கை, வலிமையின் அடையாளமாக 'விராஜ்' சின்னம் விளங்குகிறது என்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 'பாரா' உலக தடகளத்தின் விளம்பர துாதரான நடிகை, எம். பி., கங்கனா ரணாவத் கூறினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ,ஹாக்கி இந்தியா, ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர், தமிழகத்தில் நவ., 28- டிச., 10 நடக்க உள்ளது.24 சர்வதேச அணிகள் பங்கேற்க உள்ள இத் தொடரில் போட்டிகள், சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கம், மதுரை ஹாக்கி அரங்கிலும், நடக்கின்றன. நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில், போட்டி தொடர்பாக, ஹாக்கி இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. உதயநிதி உலக கோப்பை தொடரின் 'லோகோ'வை வெளியிட்டு ,உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக, விளையாட் டுத்துறை பட்ஜெட்டில், 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதில், மதுரைஹாக்கிஅரங்கின்சீரமைப்புபணிக்கானதொகையும்உள்ளடங்கும்.இப்போட்டிகள், சென்னை, மதுரையில் நடப்பது பெருமை.தமிழகத்தை விளையாட்டு போட்டிக்கான தலைமையகமாக உருவாக்க அனைவரும் ஒன்றாக உழைப்போம். . ,உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக 'லோகோ' வெளியிடப்பட்டது.
ஆசியகோப்பைவில்வித்தைஸ்டேஜ் 2 போட்டிசிங்கப்பூரில்ஜூனியர்ரிகர்வ்பிரிவுஅணிகளுக்கானஅரையிறுதியில் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் விஷ்ணு, பராஸ் ஹூடா, ஜூயல் சர்கார் இடம் பெற்ற அணி, வங்கதேசத்தை சந்தித்தது.இந்திய அணி 5-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இதில் 'நம் பர்-3' ஜப்பான அணியை சந்திக்கவுள்ளது.கலப்பு ரிகர்வ் அணிகளுக்கான அரையிறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி, விஷ்ணு ஜோடி, 5-3 என்ற கணக்கில் சிங்கப்பூரின் தபிதா, எர்ன் லின் ஜோடியை வென்று, பைனலுக்கு முன்னேறியது.காம்பவுண்டு அணிகளுக்கான அரையிறுதியில் குஷால், கணேஷ், மிஹிர் இடம் பெற்ற இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.இப்போட்டி 232-232 என சமன் ஆனது. பின் நடந்த 'ஷூட் ஆப்' போட்டியில் இந்தியா 30-29 என வென்றது.பைனலில் கஜகஸ்தானை சந்திக்க உள்ளது.இதுவரை இந்தியாவின் 5 அணிகள் பைனலுக்கு முன்னேறியுள்ளன.
5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ('ஆண்டர்சன் சச்சின்' டிராபி) பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று லீட் சில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் துவங்குகிறது.கோலி, ரோகித், அஷ்வின் ஓய்வு பெற்ற நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய அத்தியாயம் இளம் சுப்மன் கில் தலைமையில் ஆரம்பமாகிறது.இது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான (2025-2027) இந்தியாவின் முதல் போட்டி . அட்டவணை . (போட்டி மதியம் 3:30 மணிக்கு துவங்கும். ) ஜூன் 20-24 1-வது டெஸ்ட் - இடம் லீட்ஸ் ஜூலை 2-6, 2-வது டெஸ்ட்- இடம் பர்கிங்காம், ஜூலை 10-14, 3-வது டெஸ்ட் - இடம் லார்ட்ஸ் ஜூலை 23- 27, 4-வது டெஸ்ட் - இடம் மான்செஸ்டர். ஜூலை 31- ஆகஸ்ட் 4 வரை, 5-வது டெஸ்ட், இடம் ஓவல் .தமிழ்நாடுகிரிக்கெட்19-ம்தேதி டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேலத்தில், நேற்று சேலம், சேப்பாக்கம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சேப்பாக்கம் அணி பீல் டிங் தேர்வு செய்தது. சேலம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ரன் எடுத்தது, சேப்பாக்கம் அணி 16.3 ஓவரில் 162/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது
2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சீசன் துவங்கியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை லீட்சில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணிக்கு சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.ரோகித் சர்மா, கோலி, அஷ்வின் என சீனியர்கள் ஓய்வு பெற்றதால், இளம் வீரர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தவிர, முதல் டெஸ்டில் களமிறங்கும் லெவன் அணியில் யார்? இடம் பெறுவர் எனத் தெரியவந்துள்ளது. இந்திய அணி வீரர்கள் லண்டனில் இருந்து முதல் டெஸ்ட் நடக்கவுள்ள லீட்சிற்கு ரயிலில் பயணம் செய்தனர். இதுகுறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்டது. ரயில் பயணத்தில் வீரர்கள் தங்களது சிறு வயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 'ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் மலைப்ப குதியில் பயணம் செய்துள்ளதாக', துருவ் ஜூரல் தெரிவித்தார்.தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி 18-ம் தேதிசேலத்தில், நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவு லிங்' தேர்வு செய்தார். மதுரை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது. நெல்லை அணி 18.5 ஓவரில் 158 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவு லிங்' தேர்வு செய்தார். மதுரை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது. நெல்லை அணி 18.5 ஓவரில் 158 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.
அராய்ஜீத் சிங் தலைமையிலான இந்திய ஜூனியர் ஆண்கள் அணி, நான்கு நாடுகளுக்கு இடையிலான தொட ரில் (ஜூன் 21-25) பங்கேற்க பெர்லின் சென்றது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 727 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீராங்கனைகள் ஜெமிமா 14, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14வது இடத்தில் உள்ளனர். 'டி-20' பேட்டர் வரிசையில் ஸ்மிருதி மந்தனா, 4வது இடத்தில் உள்ளார். 18-ம் தேதி தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி பி.எல்., தொடரின் 2வது கட்ட போட்டிகள் சேலத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த போட்டியில் கோவை, திருச்சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 'டாஸ்' வென்ற கோவை பீல்டிங் செய்தது. திருச்சி அணி 20 ஓவரில், 168/5 ரன் எடுத்தது. கோவை அணி 20 ஓவரில் 154/9 ரன் மட்டும் எடுத்து 14 ரன்னில் தோல்வியடைந்தது.
டென்னிஸ் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், ஜூன் 30-ஜூலை 13ல் லண்டனில் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் வகையில் பிரிட்டனில் ஆண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது.இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் போபண்ணா, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி ஜோடி, செக்குடியரசின் ஜாகுப், டென்மார்க்கின் ஹோல்கர் ஜோடியை சந்தித்தது.'டை பிரேக்கர்' வரை சென்ற முதல் இரு செட்டை இரு ஜோடியும் மாறி மாறி வசப்படுத்தின. அடுத்து எடுத்து நடந்த நடந்த 'சூப்பர் டை பிரேக்கரை' போபண்ணா ஜோடி (10-6) வென்றது.ஒரு மணி நேரம், 41 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 7-6, 6-7, 10-6 வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. வாலிபால் உஸ்பெகிஸ்தானில் 16, 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சர்வதேச தேசிய லீக் வாலிபால் தொடர் நடந்தது. இந்திய அணி 19 வயது பிரிவில் பங்கேற்றது. முதல் 5 போட்டியில் 3 வெற்றி, 2 தோல்வியடைந்தது இந்திய அணி. பின் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, கிர்கிஸ் தான் மோதின. முதல் 'செட்டை இழந்த இந்தியா (21-25) அடுத்த மூன்று செட்டுகளையும் 25-14, 25-08, 25-23 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய அணி 3-1 என வெற்றி பெற்று, வெண்கலம் கைப்பற்றியது.
16- ம் தேதி போட்டிகள் டி.என்.பி.எல்., தொடரின் இரண்டாவது கட்ட போட்டி சேலத்தில் நடக்கின்றன. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் , சேப்பாக்கம் திண்டுக்கல் டிராகன் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திண்டுக்கல் அணி கேப்டன் ஆர்.அஸ்வின் முதலில் 'பீல்டிங்' தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் சேப் பாக் சூப்பர் கில்லீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது.,திண்டுக்கல் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்களே எடுத்தது. இதனால் சேப்பாக் |சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன் 5 வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.