இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் டெஸ்ட் ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது.இதற்கு முன் நேற்று மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சுப்மன் கில் கூறியது: ஒவ்வொரு தொடரிலும் ஏதாவது ஒரு வகையில் நெருக்கடி இருக்கும்.தற்போது, இந்திய அணிக்காக நீண்ட காலம் சிறப்பாக விளையாடிய, இரு முன்னணி வீரர்கள் இல்லாமல் நாங்கள் களமிறங்குகிறது. அவர்களது இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. சீனியர்' வீரர்கள் இல்லாமல் விளையாட பழகி வருகிறோம். மற்றபடி டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட உடன் திகைத்து விட்டேன். இது மிகப் பெரிய பொறுப்பு. இதற்கான சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். கேப்டன் பணியில் எனக்கென 'ஸ்டைல்' எதுவும் இல்லை. அணியின் மற்ற வீரர்களின் பலம், பலவீனங்களை அவர்களுக்கு தெரிவிக்க முயற்சிப்பேன். அணி யில் தங்களது இடம் பாதுகாப்பான என் பதை அவர்கள் உணர வேண்டும். அப்போது தான் சிறப்பாக செயல்படுவர்.வரும் டெஸ்ட் தொடருக்கான பேட்டிங் ஆர்டர் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. இந்திய வீரர்கள் இரு அணியாக பிரிந்து பயிற்சி போட்டியில் பங்கேற்க உள்ளோம்.அடுத்து 10 நாள் பயிற்சி முகாம் உள்ளது. பவுலிங்கில் 10 வீரர்கள் உள்ளனர். பும்ரா விளையாடினால் சிறப்பாக இருக்கும். அவர் இல்லாத போது, சமாளிக்கத் தேவையான பவுலர்கள் அணியில் உள்ளனர்.கேப்டனாக, மற்ற வீரர் களுக்கு முன்னுதாரணமாக இருக்க முயற்சிப்பேன் என்று சுப்மன் கில் கூறினார்.
சர்வதேச கிளாசிக்கல் செஸ் தொடர் ஆர்மேனியாவில் நடக்கிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட மொத்தம் 10 வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் 7வது சுற்றில் பிரக்ஞானந்தா, ஆர்மேனியாவின் ஹகோபியானை எதிர்கொண்டார். பிரக்ஞா னந்தா 78 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் சாம்செவியன் மோதினர். அரவிந்த், போட்டியின் 65 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.ஏழு சுற்று முடிவில் பிரக்ஞானந்தா, 5.5 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளார்.
தமிழக கிரிக்கெட் சங்கம்(டி.என். சி.ஏ.,) சார்பில் டி.என்.பி.எல்., தொடர் ,9வது சீசன் இன்று கோவையில் துவங்குகிறது.இதில் நடப்பு சாம்பியன்' திண்டுக்கல், சென்னை, கோவை, நெல்லை, மதுரை, சேலம், திருப்பூர், திருச்சி என 8 அணிகள் பங்கேற்கின்றன.இதற்கான போட்டிகள் கோவை(ஜூன் 5,11), சேலம்(ஜூன் 13,19), நெல்லை(ஜூன் 21,26), திண்டுக்கல்(ஜூன் 28ஜூலை 6) என 4 இடங்களில் நடக்கின்றன.கோவையில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் திண்டுக்கல், கோவை அணிகள் மோதுகின்றனபிரிமியர் தொடரின் 18 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக பெங்களூரு சாம்பியன் ஆனது. சின்னசாமி மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. மைதானத்தில் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர். இதில் கோலி பேசியது: உங்களிடம் பேசுவதற்கு அதிக நேரமில்லை. ஏனெனில் பிரிமியர் கோப்பையை முதலில் உங்களிடம் காட்டவேண்டும். எங்களது கேப்டன் ரஜத் படிதர் கூறியது போல, இனிமேல் ஈ சாலா கப் நம்தே' அல்ல,'ஈ சாலா கப் நம்து'(இந்த கோப்பை நமக்கு சொந்த மானது). இதை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டோம். இது அணியின் வீரர்களுக்காக அல்லது என்னைப் போல 18 ஆண்டுகளாக அணியில் இருக்கும் ஒருவருக்காக அல்ல, இந்த வெற்றி அனைத்தும் உங்களுக்கானது. இந்த மக்களுக்கானது என்றார்.
வாலிபால் ஆண்களுக்கான சர்வ தேச தேசிய லீக் வாலிபால் தொடர்உஸ்பெகிஸ்தானில் நடந்தது. 7 அணிகள் பங்கேற்றன. இந்திய அணி, ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தானுடன் 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில் இந்திய அணி துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தானை வீழ்த்தியது. ஈரானிடம் தோற்றது.அடுத்து கஜகஸ்தானை வீழ்த்திய இந்தியா பைனலுக்கு முன்னேறியது. நேற்று இதில் மீண்டும் ஈரானை எதிர்கொண்டது. முதல் செட்டை 17,25 என இழந்த இந்தியா, அடுத்த செட்டை 20,25 என நழுவவிட்டது. மூன்றாவது செட்டையும் 19,25 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய அணி 0-3 என தோல்வியடைந்து. வெள்ளிப்பதக்கம் பெற்றது. செஸ் நார்வேயில், சர்வதேச செஸ்('கிளாசிக்கல்')தொடர் நடக்கிறது. பெண்கள் பிரிவு எட்டாவது சுற்றில் இந்தியாவின் ஹம்பி, ஸ்பெயின் சாராவை சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹம்பி, போட்டியின் 58வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் வென்சுன் மோதினர். இதில் 'டைபிரேக்க ரில் வைஷாலி, வெற்றி பெற்றார். 8 சுற்று முடிவில் ஹம்பி (13.5) முதலிடத்துக்கு முன்னேறினார். சீனா வின் வென்சுன் (12.5), உக்ரைனின் அனா முஜிசக் (12.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். வைஷாலி (9.5) 5வது இடத்தில் தொடர்கிறார்.பாட்மிண்டன் இந்தோனேஷியாவில் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் சதிஷ்குமார் கருணாகரன், ஆத்யா ஜோடி, தைவானின் நிக்கோல் சன், ஹாங் வெய் ஜோடியை சந்தித்தது.முதல் செட்டை 15,21 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டை 21,16 என கைப்பற்றியது. பின் நடந்த 3வது செட்டையும் இந்திய ஜோடி 21-17 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 15–21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் காயத்ரி, திரீஷா ஜோடி உக்ரைனின் புக்ரோவா, கான்ட்மெர் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 21-14, 22-20 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றது.
JUNE 3-ம் தேதி அஹமதாபாத்தில், பஞ்சாப், பெங்களூர் அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 190/9 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 184/ 7 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக KRUNAL PANDYA தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிமியர் கிரிக்கெட் அரங்கில் முதல் முறையாக கோப்பை வென்று அசத்தியது பெங்களூரு அணி. கோலியின் 18 ஆண்டு கனவு நனவானது. நேற்றைய பைனலில் தோற்ற அணி, பஞ்சாப் இரண்டாவது இடம் பெற்று ஆறுதல் அடைந்தது.
ஹாக்கி சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோ லீக்தொடர் நடக்கிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து (16 புள்ளி), பெல்ஜியம் (16), இந்தியா (15) 'டாப்-3' இடத்தில் உள்ளன. அடுத்து இந்திய அணி, நெதர்லாந்து மண்ணில் நெதர்லாந்து(ஜூன்7,9), அர்ஜென்டினா(ஜூன் 11,12) அணிகளுடன் விளையாட உள்ளது. இதற்குத் தயாராகும் வகையில் அயர்லாந்து சென்ற இந்திய அணி இரண்டு போட்டியில் பங்கேற்கிறது. முதல் போட்டி டப்ளினில் நடந்தது. இந்தியாவுக்கு மன்தீப் சிங், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கைகொடுக்க, முதல் பாதியில் 2-0 எனமுன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில் இந்தியாவின் தில்பிரீத் சிங், இரண்டு கோல்அடித்தார். முடிவில் இந்திய அணி 4,0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பாட்மிண்டன் 'சூப்பர் 1000' பாட்மின்டன் தொடர்இந்தோனேஷியாவில் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையரில்,17வது இடத்திலுள்ள இந்தியாவின் சிந்து,33வது இடத்திலுள்ள ஜப்பானின் ஒகுஹராவை சந்தித்தார்.இதில் சிந்து 22-20,21-23,21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி,இந்தோனேஷியாவின் லியோ ராலி, பாகஸ் மவுலானா ஜோடியை முதல் சுற்றில் எதிர் கொண்டது. இதில் இந்திய ஜோடி18-21, 21-18, 21-14 என வெற்றி பெற்றது.ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர் பிரனாய், இந்தோனேஷிய வீரர் பர்ஹானைசந்தித்தார்.பிரனாய் 17-21,18-21 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தார். இளம்இந்திய வீரர் லக்சயா சென், 11–21, 22-20, 15-21 என சீனவீரர் யு க்யுஷியிடம் வீழ்ந்தார். செஸ் நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்கல்') தொடர் நடக்கிறது. 7வது சுற்றில் நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ் 19, சக அர்ஜுனை வீரர் சந்தித்தார். 92 வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார். 7 சுற்று முடிவில் அமெரிக்காவின் காருணா (12.5), குகேஷ் (11.5) முதல் இரு இடத்துக்கு முன்னேறினர். நார்வேயின் கார்ல்சன் (11.0), 3வது இடத்தில் பின் தங்கினார். அர்ஜுன் (7.5) 5வதுஇடத்தில் உள்ளார்.பெண்கள் பிரிவு ஏழாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி, சீனாவின் டிங்ஜீயிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் ஹம்பி, உக்ரைனின் அனா முஜிசக் மோதிய மற்றொரு போட்டி 'டிரா' ஆனது. அடுத்து நடந்த 'டைபிரேக்கர்' போட்டியும் 'டிரா' ஆனது. சர்வதேச செஸ் தரவரிசையில் அர்ஜுனை (2772.6,5வது இடம்) பின்தள்ளி குகேஷ் 4வது இடத்துக்கு முன்னேறினார் குகேஷ் (2782,3), பிரக்ஞானந்தா (2765.9) 7வது, அரவிந்த் சிதம்பரம் (2753.5) 10வது இடம்பிடித்தனர். உலகத் தரவரிசையில் 'டாப்-10' பட்டியலில் இந்திய வீரர்கள் இடம் பெற்றிருப்பது இது தான் முதன் முறை.
செஸ் நார்வேயில், சர்வதேச செஸ் ('கிளாசிக்') தொடர் நடக்கிறது. 6வது சுற்றில் நடப்பு உலக சாம்பியன் இந்தியாவின் குகேஷ் 19, (நம்பர்-5), ஐந்து முறை உலக சாம்பியன் ஆன உலகின்'நம்பர்-1' வீரர், நார்வேயின் கார்ல்சனை34, எதிர்கொண்டார். இப் போட்டியில், குகேஷின் 62வது நகர்த்தலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் கார்ல்சன். நீண்ட நேரம் விளையாடப்படும் முறையிலான போட்டியில் 'கிளாசிக்' செஸ் குகேஷ், முதன் முறையாக கார்ல்சனை வீழ்த்தினார். கிரிக்கெட் அஹமதாபாத்தில் இன்று நடக்கும் பைனலில்பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி நான்காவது முறையாக பைனலில்(2009,2011,2016,2025) விளையாட உள்ளது. பஞ்சாப் அணி2வது முறையாக(2014,2025) பைனலில் பங்கேற்கிறது.இரு அணிகளும் இதுவரை கோப்பை வென்றதில்லை. இன்று அசத்தும் அணி, முதல் முறையாக கோப்பை வெல்லலாம். துப்பாக்கி சுடுதல்உலக கோப்பை பாரா துப்பாக்கிசுடுதல் போட்டி தென் கொரியாவில் நடக்கிறது. பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்குப் பின் நடந்த முதல் 'உலக' தொடரான இதில் 26 நாடுகளில் இருந்து 192 நட்சத்திரங்கள் பங்கேற்றனர். பெண்களுக்கான 10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் ருபினா (566 புள்ளி), சுமேதா (565), ஷிர்ஸ்டி (564) இணைந்து 'டாப்-3' இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்து பைனலில் நடந்த சிறப்பாக செயல்பட்ட சுமேதா,235.2 புள்ளி எடுத்து, முதலிடம் பெற்று தங்கம் கைப்பற்றினார். மற்றொரு இந்திய வீராங்கனை ஷிர்ஸ்டி (234.9)வெள்ளிப் பதக்கம் வென்றார். பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ருபினாவுக்கு (132.5) 7வது இடம் தான் கிடைத்தது.ஆண்களுக்கான10 மீ., ஏர் பிஸ்டல் பிரிவில் போட்டி நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் ருத்ரான்ஷ்,236.3 புள்ளி எடுத்து, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். மற்றொரு இந்திய வீரர் மணிஷ் நார்வல் (236.0) வெள்ளி கைப்பற்றினார்.
JUNE 1-ம் தேதி அஹமதாபாத் , பஞ்சாப் மும்பை அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 203/6 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பஞ்சாப் அணி 207/5 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக SHREYAS IYER தேர்ந்தெடுக்கப்பட்டார். பைனல் சுற்று நாளை 3-ம் தேதி அஹமதாபாத்தில்பஞ்சாப், பெங்களூர் அணி மோதுகின்றது.
ஹாக்கி நான்கு நாடுகள்பங்கேற்கும் ஜூனியர் பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் அர்ஜென்டினாவில் நடக்கிறது. இந்தியா, அர் ஜென்டினா, சிலி, உருகுவே அணிகள் பங்கேற்கின்றன. முதல் மூன்று போட்டியில் வென்ற இந்தியா, 4வது போட்டியில் சிலியிடம் தோல்வியடைந்தது. இந்திய அணி, தனது 5வது போட்டியில் நேற்று உருகுவே அணியை மீண்டும் சந்தித்தது.விறுவிறுப்பான இப் போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலையில் இருந்தது. இந்திய அணிக்கு துணை கேப்டன் ஹினா (10வது நிமிடம்), லால்ரின்புய் (242) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.பின்போட்டியின்முடிவு 'பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் கீதா, கனிகா, லால்தான்ட் லுவாகி தலா ஒரு கோல் அடித்து கை கொடுக்க இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது செஸ் நார்வேயில், சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இதன் 5வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா மோதினர். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜூன், 48வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்றொரு போட்டியில் குகேஷ் (கருப்பு), சீனாவின் யி வெய் (வெள்ளை) மோதினர். இதில் குகேஷ் 56வது நகர்த்தலில் தோல் வியடைந்தார்.ஐந்து சுற்றுகளின் முடிவில் அர்ஜுன் 6.0 புள்ளி களுடன் 4வது இடத்தில் உள்ளார். முதல் மூன்று இடங்களில் கார்ல்சன் (9.5 புள்ளி), கருவானா (8), நகமுரா (6.5) உள்ளனர். கடைசி இரு இடங்களில் யி வெய், குகேஷ் (தலா 5.5 புள்ளி) உள்ளனர்.பெண்கள் பிரிவில் இந்தியாவின் கொனேரு ஹம்பி, சீனாவின் லீ டிங் ஜீயை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீராங்கனை வைஷாலி, ஸ்பெயினின் சாராவை தோற்கடித்தார். மல்யுத்தம் மங்கோலியாவில், சர்வதேச மல்யுத்த ரேங்கிங் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் உதித், மங்கோலியாவின்துமென் பிலெக் மோதினர். இதில் உதித் 4-6 என்ற கணக்கில் தோல்வி யடைந்து வெள்ளிப்பதக் கத்தை கைப்பற்றினார்.ஆண்களுக்கான 'பிரீஸ் டைல்' 57 கிலோ பிரிவு 3-4வது இடத்துக்கான போட்டியில் இந்தியாவின் அமன் ஷெராவத், துருக்கியின் பெகிர் கேசர் மோதினர். இதில் அமன் 12-2 என வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.இத்தொடரில் இந் தியாவுக்கு 6 தங்கம், 7 வெள்ளி, 8 வெண்கலம் என, மொத்தம் 21 பதக்கம் கிடைத்தது.
MAY 30-ம் தேதி பஞ்சாப்பில், குஜராத், மும்பை அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 228/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 208/6 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ROHIT SHARMA தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவுது தகுதி சுற்றில் மும்பை அணி வெற்றி பெற்றது, ஜூன் 1-ம் தேதி eliminater ரவுண்டில் மும்பை, பஞ்சாப் அணி மோதுகின்றது.