25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


கிரிக்கெட்  -  2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சீசன் துவங்கியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட் - 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சீசன் துவங்கியது.

 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் சீசன் துவங்கியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாளை லீட்சில் துவங்குகிறது. இதற்கான இந்திய அணிக்கு சுப்மன்கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரோகித் சர்மா, கோலி, அஷ்வின் என சீனியர்கள் ஓய்வு பெற்றதால், இளம் வீரர்கள் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தவிர, முதல் டெஸ்டில் களமிறங்கும் லெவன் அணியில் யார்? இடம் பெறுவர் எனத் தெரியவந்துள்ளது. 

இந்திய அணி வீரர்கள் லண்டனில் இருந்து முதல் டெஸ்ட் நடக்கவுள்ள லீட்சிற்கு ரயிலில் பயணம் செய்தனர். இதுகுறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் போர்டு வெளியிட்டது. ரயில் பயணத்தில் வீரர்கள் தங்களது சிறு வயது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். 'ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து, இமாச்சல பிரதேசத்தில் மலைப்ப குதியில் பயணம் செய்துள்ளதாக', துருவ் ஜூரல் தெரிவித்தார்.

தமிழ்நாடு கிரிக்கெட் போட்டி 18-ம் தேதி

சேலத்தில், நேற்று நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவு லிங்' தேர்வு செய்தார்.  மதுரை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது.  நெல்லை அணி 18.5 ஓவரில் 158 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. 

டி.என்.பி.எல்., லீக் போட்டியில் மதுரை, நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற நெல்லை அணி கேப்டன் அருண் கார்த்திக் 'பவு லிங்' தேர்வு செய்தார்.  மதுரை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 168 ரன் எடுத்தது.  நெல்லை அணி 18.5 ஓவரில் 158 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News