பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் இந்திய பெண்கள் அணி தோல்வி .
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன், ஆஸ்திரேலியாவில், 2026, மார்ச் 1–26ல் (12 அணிகள்) நடக்கவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்றில் இந்திய பெண்கள் அணி, முதன் முறையாக இத்தொடருக்கு தகுதி பெற்றது.
தனது முதல் போட்டியில்இந்திய அணி வியட்நாம் (2026, மார்ச் 4) அணியை சந்திக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் உலகத் தரவரிசையில் 63வது இடத்திலுள்ள இந்திய அணி, சொந்த மண்ணில் ஈரான் ('நம்பர் - 73), நேபாள (89) அணிகளுடன்இணைந்து முத்தரப்பு ‘நட்பு தொடரில் பங்கேற்கிறது.
மேஹாலயாவின் ஷில்லாங்கில் முதல் போட்டியில். இந்தியா, ஈரான் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க வில்லை. இரண்டாவது பாதியில், போட்டியின் 64வது நிமிடம் ஈரான் வீராங்கனை சாராதிதார் ஒரு கோல் அடித்தார்.
இந்திய அணி 74 வது நிமிடம் மீண்டும் சாரா, இரண்டாவது கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 0-2 என தோல்வியடைந்தது.
0
Leave a Reply