மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா 'ஏ' பெண்கள் அணி, கோப்பை வென்றது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா சென்ற இந்தியா 'ஏ' பெண்கள் அணி, பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. நேற்று, பிரிஸ்பேனில் 3வது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இந்தியா 'ஏ' அணிக்கு 47.4 ஓவரில் 216 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஆஸ்திரேலியா 'ஏ' அணி 27.5 ஓவரில் 222/1 ரன் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது. இந்தியா 'ஏ' அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.
0
Leave a Reply