முடி வளர்ச்சியை அதிகரிக்க வேம்பாளம் பட்டை எண்ணெய்.
வேம்பாளம் பட்டையானது பெண்களின் முடி வளர்ச்சியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. மற்றும் இது முடி உதிர்வதையும் தடுக்கிறது.
வேம்பாளம் பட்டை எண்ணெய் எப்படி தயாரிப்பது?
தேங்காய் எண்ணெய் - 1கப்
விளக்கெண்ணெய் - 1/4 கப்
சிறிய வேம்பாளம் பட்டை - 2
செய்முறை:
இந்த எண்ணெய்யை செய்ய முதலில் ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த 3 பொருட்களையும் சேர்த்து 2 முதல் 3 நாட்கள் சூரிய ஒளியில் படும் இடத்தில் வைக்க வேண்டும். 3 நாட்கள் கழித்து எண்ணெயின் நிறம் சிவப்பு வண்ணத்தில் மாறி இருக்கும். நீங்கள் அதனை பயன்படுத்தும் முன் தேவையான அளவு எடுத்து சூடாக்கி பயன்படுத்தவும்.
உடல் ஆரோக்கியத்திற்கு வேம்பாளம் பட்டை: சருமம் பொழிவு பெற சரும தொற்றுகள் வராமல் தடுக்க அழற்சி எதிர்ப்புத் தன்மை தீக்காயங்களை விரைவில் ஆற வயிற்றுப்போக்கு, அல்சர் மற்றும் நாள்பட்ட இருமல் குணமாக சிறுநீரகக் கற்கள், மஞ்சள் காமாலை, எலும்பு முறிவு போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேம்பாளம் பட்டை, பெருங்காயம், கருஞ்சீரகம் ஆகியவற்றை பொடியாக எடுத்து, தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து காயம் இருக்கும் இடத்தில் போட்டு வந்தால் அவை விரைவில் ஆறும்.
0
Leave a Reply