நேந்திரங்காய் வறுவல் நல்ல நிறம் கிடைக்க….
கீரைகளை செய்தித்தாளில் மடித்து வைத்தால் அவற்றின் பசுமை நிறம் மாறாது.
நேந்திரங்காய் வறுவலுக்கு சீவியதும் மஞ்சள் பொடி பிசிறி பிறகு பொரித்தால் நல்ல நிறம் கிடைக்கும். உடம்புக்கும் நல்லது.
வாழைக்காய் நறுக்கியதும் தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காமல் இருக்கும்.
மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றினால், சாதம் ஊறி மாவு போல் கூழாகிவிடும். தண்ணீருடன் இரண்டு டீஸ்பூன் மோர் கலந்து விட்டுப் பாருங்கள். மறுநாளும் சாதம் மல்லிகைப் பூப்போல உதிர் உதிராக இருக்கும்.
வெயில் காலத் தில் இட்லி மாவு சீக்கிரத்தில்புளித்துவிடும் .இட்லி. தோசைக்கு அரிசி, பருப்பைக் கழுவி ஊ ற வைக்கும் போது, ஒரு மணிநேரத்தில் அந்தத் தண்ணீரை வடித்து விட்டு, வேறு புதிய தண்ணீரை ஊற்றவும்.. இப்படி இரண்டு(அ மூன்று முறை தன்ணீரை மாற்றி ஊறவைத்தால் மாவு சீக்கிரம்புளிக்காது. .
0
Leave a Reply