25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செரிமானத்தை ஊக்குவிக்கும் பிரண்டை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செரிமானத்தை ஊக்குவிக்கும் பிரண்டை

பிரண்டை செடிகளில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, என பல வகைகள் உள்ளனவேலிகளில் படர்ந்து வளரும் தாவரம் தான் பிரண்டை, நீர் அதிகம் தேவையில்லை. அதன் தண்டை நட்டு வைத்தால் போதும், தானாகவே வளர்ந்து விடும்.தண்டு,வேர்,பழம் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. எலும்பு முறிவை குணப்படுத்து உதவுகிறது. மேலும், எலும்புகளையும், மூட்டுகளையும் வலிமையாக்குகிறது.

ஒரு சிறந்த வலி தீர்க்கும் மருந்தாக பயன்படுகிறது. வாயுவால் எலும்பு மற்றம் நரம்புகளின் இணைப்புகளில் தேவையற்ற நீர் தங்கி விடும். பின் அவை முதுகுத் தண்டு மற்றம் கழுத்து பகதிக்கு இறங்கி, பசை போல்) அங்கேயே இருந்து, தாங்க முடியாத கழுத்து மற்றும் முதுகு வலியை தரும். இதனால், கழுத்தை திருப்பவோ, குனியவோ முடியாமல் அவதிப்படுவர். பிஞ்சு பிரண்டையை உலர்த்தி, பொடி செய்து அதனடன் சிறிது வெந்நீர் கலந்து பற்று போட்டால், முதுகு மற்றும் கழுத்தில் உள்ள நீர்ப்பசை இளகி, முதுகு வலி மற்றும் கழுத்து வலி குணமாகும்.

ரத்த தேங்கு நிலை மற்றம் ரத்தப் போக்கை சரி செய்ய உதவுகிறது. மேலும், மூல நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. செரிமானத்தை ஊக்குவிக்கிறது. கல்லீரல் சேதத்தை தடுக்கிறது. நரம்புகள் மற்றும் தசைகளை அமைதிப்படுத்தும் மருந்தாக பிரண்டை சாறு செயல்படுகிறது.மூலம், கீழ் வாதம் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வளிக்கிறது. பசி, எடுக்காதவர்கள் அல்லது அஜீரணத்தால் அவதிப்படுவோர் பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், வாயுத் தொல்லை மட்டுப்படும், சுவையின்மை மறைந்து, பசி அதிகரிக்கும். உடலின் அதிக எடையை குறைப்பதற்க பிரண்டையை உட்கொள்ளலாம். பிரண்டை துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால், ரத்த ஓட்டம் சீராகும். இதயமும் பலப்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்றவற்றிற்கு, பிரண்டை சிறந்த மருந்தாகும். இது, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது, புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் மருந்துகளில் பிரண்டையும் இடம் பெற்றிருக்கும். பிரண்டை சாற்றைக் கொண்டு வாய் கொப்பளித்தால், பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவு மற்றம் பல் ஈறுகளில் உண்டான அழற்சி போன்றவை குறையும், மேலும், பற்களில் படிந்திருக்கம் சீமை சண்ணாம்பை சுத்தமாக்கம். பிரண்டையில் உள்ள நுண்ணுயிர் வளர்ச்சி தடுக்கப்படும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News