25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


அதிக வெப்பநிலை காரணமாக உடலில் தோன்றும் வேர்வையால் வேர்க்குரு ஏற்படுகிறது
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அதிக வெப்பநிலை காரணமாக உடலில் தோன்றும் வேர்வையால் வேர்க்குரு ஏற்படுகிறது

 ஏப்ரல் மாதத்திலேயே வெப்பம் உச்சத்ததில் இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலால் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். வெயிலில் நீண்ட நேரம் தங்குவதால் உடல் உஷ்ணம் வேர்க்குரு பிரச்சனை அதிகரிக்கிறது. சிறிய சிவப்பு தடிப்புகள் தோன்றுவதால் அரிப்பு மற்றும் எரியும் உணர்வு ஏற்படுகிறது. பல நேரங்களில் ஆடை அணிவதில் கூட சிரமம் ஏற்படுகிறது..

வேர்க்குரு போக்கமுல்தானி மெட்டியை பயன்படுத்தி உஷ்ண தடிப்புகளை நீக்கலாம். முல்தானி மெட்டி குளிர்ச்சியாக இருக்கும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத் தழும்புகளில் இருந்து நிவாரணம் பெறலாம். முல்தானி மெட்டியில் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் செய்துக்கொள்ள வேண்டும். சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து பின் வேர்க்குரு இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். வேர்க்குரு இருக்கும் பகுதிகளில் இந்த பேஸ்ட்டை 15 நிமிங்கள் உடலில் இருந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

வேர்க்குருவை தடுக்க கோடையில் முடிந்தவரை காட்டன் துணியை மட்டுமே அணியுங்கள். இது வியர்வை உறிஞ்சும் பண்புகளைக் கொண்டுள்ளதால் உங்கள் சருமத்தை சுவாசிக்க அனுமதிக்கிறது.

வேர்க்குருவை தடுக்க முடிந்தவரை உடலை நீரேற்றமாக வைத்திருங்கள். உடலை ஈரப்பதமூட்டும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள். எலுமிச்சை நீர், பழ வகை சார்ந்த ஜூஸ் மற்றும் சர்பத் போன்ற பானங்களின் உதவியை எடுத்துக் கொள்ளலாம். இதன் காரணமாக உடலில் இருந்து நச்சு பொருட்கள் எளிதில் அகற்றப்படுகின்றன.

வெயிலில் இருந்து வெளியே வரும்போதெல்லாம் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் குளிக்கவும். இதனால் உடலில் தேங்கியிருக்கும் வியர்வை நீங்கும் தொற்று மற்றும் வேர்க்குரு ஆபத்து இருக்காது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News