25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >>


பிரபல நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் அப்பாவின் நினைவாக மருத்துவமனை ஒன்றை புதியதாக திறந்திருக்கிறார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரபல நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் அப்பாவின் நினைவாக மருத்துவமனை ஒன்றை புதியதாக திறந்திருக்கிறார்.

பழம் பெரும் நடிகரான ஜெய்சங்கர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருடைய திரைப்படங்களை தாண்டியும் ரசிகர்களின் மத்தியில் தன்னுடைய உதவும் குணத்தால் அதிகமாக பரீட்சையமானவர்தான். தான் வாழும் போதே பலருக்கும் உதவிகளை செய்து கொண்டிருந்தார். அதோடு ஆதரவற்றோர் இல்லங்களுக்கு தானே செலவு செய்து பல பிரபலங்கள் கூட்டிக்கொண்டு சென்று அவர்களை உதவ வைத்திருக்கிறார். அதுபோல நடிகர் ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.. ஜெய்சங்கரின் மூத்த மகனான விஜய் சங்கர் அப்பா ஆசை பட்ட படியே கண் மருத்துவராக ஆகி இருக்கிறார். அத்தோடு தன்னுடைய தந்தை சொன்னபடியே பல கஷ்டப்பட்டவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறாராம். தன்னுடைய தந்தை நினைவு நாளில் ஏழைகள், சினிமா துறையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் என பலருக்கும் தொடர்ச்சியாகஉதவிசெய்துகொண்டிருக்கிறாராம். 

25 வருட அனுபவத்தில் இதுவரைக்கும் இலவசமாக பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண் ஆபரேஷன் செய்து முடித்திருக்கிறேன் என்று சமீபத்தில் அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இந்த நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் சங்கர் பற்றி ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் டாக்டர் விஜய் சங்கரின் புதிய கிளினிக் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பயணத்தில் இந்த புதிய அத்தியாயத்தில் நீங்கள் பெரும் வெற்றியையும், செழிப்பையும் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.. அதோடு நேரில் சென்று விஜய் சங்கரை ஆசிர்வாதமும் வழங்கி இருக்கிறார்.இதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தொடர்ச்சியாக நீங்களும் உங்கள் அப்பாவை போல பலருக்கும் உதவி செய்ய வேண்டும் என்று விஜய் சங்கருக்கு ஆசிர்வாதங்களை வழங்கி வருகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News