வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் “பருத்தி திருவிழா “ என்ற தலைப்பில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சௌடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் (25.01.2025) “பருத்தி திருவிழா “ என்ற தலைப்பில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் பார்வையிட்டார்.
மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வேளாண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பங்கள், விதைகள் நவீன விவசாய கருவிகள் உள்ளிட்டவை குறித்து அறிந்து பயன்பெறும் வகையில் வட்டார அளவில் ஒவ்வொரு தலைப்பிலும் நடைபெற்று வருகிறது.அதன்படி, இன்று அருப்புக்கோட்டையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் பருத்தி திருவிழா என்ற தலைப்பில் நடைபெறுகிறது.இவ்வேளாண் கண்காட்சியில் விவசாயிகள் பயனடைந்திடும் வகையில் வேளாண் தொழில் நுட்ப விளக்கக் காட்சிகள், நவீன விவசாய தொழில் நுட்ப விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது. வேளாண் ஆராய்ச்சி நிலைங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வேளாண் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொழில் நுட்பங்கள், இடுபொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் நெல், சிறுதானியங்கள், மா, பருத்தி, மிளகாய், மக்காச்சோளம், வேளாண் இயந்திரங்கள் பயன்பாடுகள், காய்கறிகள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள், தென்னை பயிர்கள் தொடர்பாக அனைத்து தொழில் நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள் மற்றும் செயல் விளக்கங்களும் வழங்கப்படுகிறது.மேலும், அனைத்து வட்டார விவசாயிகளுக்கும் பயிர் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.விவசாயிகள் மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையிலும், புதிய நவீன தொழில் நுட்பங்களின் உதவியுடனும், சந்தை மதிப்புள்ள வேளாண் பொருட்களை விளைவிப்பதின் மூலமும் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.
0
Leave a Reply